ETV Bharat / state

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - பிரவீனின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மாணவரின் தந்தைக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

author img

By

Published : Nov 28, 2019, 9:05 PM IST

தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்
தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் மாணவர்களின் வயதை கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களின் நீதிமன்ற காவலும் 4முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவீனின் தந்தை சரவணன் ஜாமீன் கேட்டு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் பிரவீனின் தந்தைக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திற்கு வரும் உதித்சூர்யாவின் தந்தை

கடந்த 26ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் உள்ள மாணவர் உதித்சூர்யாவின் தந்தையான மருத்துவர் வெங்கடேசனுக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கு ஜாமின்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் மாணவர்களின் வயதை கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களின் நீதிமன்ற காவலும் 4முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவீனின் தந்தை சரவணன் ஜாமீன் கேட்டு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் பிரவீனின் தந்தைக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திற்கு வரும் உதித்சூர்யாவின் தந்தை

கடந்த 26ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் உள்ள மாணவர் உதித்சூர்யாவின் தந்தையான மருத்துவர் வெங்கடேசனுக்கு தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : மாணவர் உதித் சூர்யாவின் தந்தைக்கு ஜாமின்!

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிறையில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மாணவரின் தந்தைக்கு தேனி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.


Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த டிசம்பர் 25ம் தேதி கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் மாணவர்களின் வயதை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களின் நீதிமன்ற காவலும் 4முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவீனின் தந்தை சரவணன் ஜாமின் கேட்டு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Conclusion: கடந்த 26ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் உள்ள மாணவர் உதித்சூர்யாவின் தந்தையான மருத்துவர் வெங்கடேசனுக்கு தேனி நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.