ETV Bharat / state

தென்மேற்கு பருவமழை தொடக்கம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்!

author img

By

Published : Jun 8, 2020, 4:49 PM IST

தேனி: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கின்ற பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர்
தேனி மாவட்ட ஆட்சியர்

கேரளாவில் கடந்த வாரம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஆற்றங்கரையில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாவலர்களின் துணையின்றி ஆற்றங்கரைப் பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்கக் கூடாது. மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக மீட்புக் குழுவை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிவாரண முகாம்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவித்திட 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பொது மக்களுக்கு மருத்துவ உதவிகளை அளித்திட மருத்துவ குழுக்களைத் தயார் நிலையில் வைத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய் காலி சாக்குப் பைகள் ஆகியவற்றினை போதுமான அளவு இருப்பு வைத்திட வேண்டும். தினசரி மழை அளவு, அணைகளின் நீர்மட்டம் விவரம், கால்நடைகள், குடிசைகள், பயிர் சேதம், உள்கட்டமைப்புகள் சேதம் குறித்து உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

ஆற்றங்கரை பகுதிகளில் தேவையான இடங்களில் எச்சரிக்கை, விழிப்புணர்வு பதாகைகளை வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் மழை வெள்ளம், இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 04546-261093 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த வாரம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஆற்றங்கரையில் வசித்து வரும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாவலர்களின் துணையின்றி ஆற்றங்கரைப் பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்கக் கூடாது. மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக மீட்புக் குழுவை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து நிவாரண முகாம்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிவாரண முகாம்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் வெள்ள பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவித்திட 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை பதிவு செய்து சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பொது மக்களுக்கு மருத்துவ உதவிகளை அளித்திட மருத்துவ குழுக்களைத் தயார் நிலையில் வைத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய் காலி சாக்குப் பைகள் ஆகியவற்றினை போதுமான அளவு இருப்பு வைத்திட வேண்டும். தினசரி மழை அளவு, அணைகளின் நீர்மட்டம் விவரம், கால்நடைகள், குடிசைகள், பயிர் சேதம், உள்கட்டமைப்புகள் சேதம் குறித்து உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.

ஆற்றங்கரை பகுதிகளில் தேவையான இடங்களில் எச்சரிக்கை, விழிப்புணர்வு பதாகைகளை வைத்திடவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் மழை வெள்ளம், இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 04546-261093 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அரசு மருத்துவமனையில் பயிலும் செவிலியர் மாணவிக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.