ETV Bharat / state

பாசனத்திற்காக சோத்துப்பாறை அணை திறப்பு!

author img

By

Published : Oct 26, 2020, 3:06 PM IST

தேனி: சோத்துப்பாறை அணையில் இருந்து பெரியகுளம் பகுதி முதல் போக சாகுபடிக்காக 30 கனஅடி தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

open
open

பெரியகுளம் அருகே உள்ள 126.68 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணைக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர் வரத்து வருகின்றது. பெரியகுளம், தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம், வடுகப்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரமா ஆகிய பகுதிகளில் உள்ள 1,825 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பகுதி மற்றும் 1,040 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சோத்துப்பாறை அணைதான் நீராதாரம்.

இந்நிலையில், பாசனம் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காக, 30 கனஅடி தண்ணீரை சோத்துப்பாறை அணையில் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். இன்று முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை 30 கன அடியும், டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை 27 கன அடியும், ஜனவரி 16 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை 25 கன அடியும் என 141 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

பாசனத்திற்காக சோத்துப்பாறை அணை திறப்பு!

நீர் இருப்பை பொறுத்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 121.68 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1 கன அடியாகவும் இருந்தது. இந்நிகழ்வில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'நலமான மாநிலமே வளமான மாநிலம்' என்பதன் அடிப்படையில் அரசு செயல்படுகிறது - முதலமைச்சர்

பெரியகுளம் அருகே உள்ள 126.68 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணைக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர் வரத்து வருகின்றது. பெரியகுளம், தென்கரை, லட்சுமிபுரம், தாமரைக்குளம், வடுகப்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரமா ஆகிய பகுதிகளில் உள்ள 1,825 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பகுதி மற்றும் 1,040 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சோத்துப்பாறை அணைதான் நீராதாரம்.

இந்நிலையில், பாசனம் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காக, 30 கனஅடி தண்ணீரை சோத்துப்பாறை அணையில் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார். இன்று முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை 30 கன அடியும், டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை 27 கன அடியும், ஜனவரி 16 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை 25 கன அடியும் என 141 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

பாசனத்திற்காக சோத்துப்பாறை அணை திறப்பு!

நீர் இருப்பை பொறுத்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 121.68 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1 கன அடியாகவும் இருந்தது. இந்நிகழ்வில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'நலமான மாநிலமே வளமான மாநிலம்' என்பதன் அடிப்படையில் அரசு செயல்படுகிறது - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.