ETV Bharat / state

பூட்டிய வீட்டில் 8 சவரன் நகைக் கொள்ளை

author img

By

Published : Dec 10, 2020, 1:37 PM IST

தேனி: சிக்கன் கடை உரிமையாளர் வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் எட்டு சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

One and a half lakh worth of jewelery looted from a locked house in Theni
One and a half lakh worth of jewelery looted from a locked house in Theni

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே திருமலை நகர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்துவருபவர் சுப்பிரமணி. சிக்கன் கடை நடத்திவரும் இவர், வியாபாரம் நிமித்தமாக கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருப்பூருக்குச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்றிரவு ஊர் திரும்பிய அவர், வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பீரோவிலிருந்த மோதிரம், செயின் என சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள எட்டு சவரன் தங்க நகைகள் திருடுபோனதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தடயவியல் வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முக்கிய ஆதாரங்களைச் சேகரித்தனர். பின்னர், இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் கடையின் பூட்டை உடைத்து 32 ஆயிரம் ரூபாய் கொள்ளை!

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே திருமலை நகர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்துவருபவர் சுப்பிரமணி. சிக்கன் கடை நடத்திவரும் இவர், வியாபாரம் நிமித்தமாக கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருப்பூருக்குச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்றிரவு ஊர் திரும்பிய அவர், வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பீரோவிலிருந்த மோதிரம், செயின் என சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள எட்டு சவரன் தங்க நகைகள் திருடுபோனதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தடயவியல் வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முக்கிய ஆதாரங்களைச் சேகரித்தனர். பின்னர், இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: செல்போன் கடையின் பூட்டை உடைத்து 32 ஆயிரம் ரூபாய் கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.