ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை

author img

By

Published : Sep 29, 2019, 3:22 PM IST

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்கியுள்ள அபிராமி, ராகுல் ஆகியோரும் அவர்களது தந்தையும் இன்று சிறைக்கு செல்கின்றனர். அவர்கள் பயின்ற மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த சூழலில் நேற்று கைது செய்யப்பட்ட ஆறு பேரில், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் பிரவீனும் அவரது தந்தை சரவணனும் 15 நாள் நீதிமன்ற காவலுக்காக நேற்று தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று ராகுல் அவரது தந்தை டேவிஸ், அபிராமி அவரது தந்தை மாதவன் ஆகியோர் சிறைக்கு செல்கிறார்கள். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று இந்த ஆறு நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவர்களும் படித்த கல்லூரியின் முதல்வர்கள் நேரில் ஆஜராக சிபிசிஐடியால் சம்மன் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் பிரவீன் படித்த எஸ்ஆர்எம் கல்லூரியின் முதல்வர் சுந்தரம், ராகுல் படித்த பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாய்குமார் ஆகியோர் ஆஜராகி மாணவர்களின் ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை

தற்போது அபிராமி படித்த சத்யசாய் மருத்துவ கல்லூரியின் முதல்வர் பிரேம்நாத் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இவருக்கு முன்னதாக அக்கல்லூரியின் கண்காணிப்பாளர் சுகுமாரன் அண்ணாமலை சிபிசிஐடியினரிடம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இவை அனைத்திலும் தொடர்புடைய இடைத்தரகர்களை தேடும் பணியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: சிபிசிஐடி விசாரணையில் மாணவர் பிரவீன் உடல்நிலை பாதிப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த சூழலில் நேற்று கைது செய்யப்பட்ட ஆறு பேரில், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் பிரவீனும் அவரது தந்தை சரவணனும் 15 நாள் நீதிமன்ற காவலுக்காக நேற்று தேனி சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று ராகுல் அவரது தந்தை டேவிஸ், அபிராமி அவரது தந்தை மாதவன் ஆகியோர் சிறைக்கு செல்கிறார்கள். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று இந்த ஆறு நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த மூன்று மாணவர்களும் படித்த கல்லூரியின் முதல்வர்கள் நேரில் ஆஜராக சிபிசிஐடியால் சம்மன் அனுப்பப்பட்டது. இதனடிப்படையில் பிரவீன் படித்த எஸ்ஆர்எம் கல்லூரியின் முதல்வர் சுந்தரம், ராகுல் படித்த பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாய்குமார் ஆகியோர் ஆஜராகி மாணவர்களின் ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை

தற்போது அபிராமி படித்த சத்யசாய் மருத்துவ கல்லூரியின் முதல்வர் பிரேம்நாத் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இவருக்கு முன்னதாக அக்கல்லூரியின் கண்காணிப்பாளர் சுகுமாரன் அண்ணாமலை சிபிசிஐடியினரிடம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இந்த விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இவை அனைத்திலும் தொடர்புடைய இடைத்தரகர்களை தேடும் பணியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: சிபிசிஐடி விசாரணையில் மாணவர் பிரவீன் உடல்நிலை பாதிப்பு

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மேலும் நால்வருக்கும் இன்று சிறை.
மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர்.


Body: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி தீவிரமாக விசாரித்து வரும் சூழலில் நேற்று கைது செய்யப்பட்ட 6 பேரில், பிரவின் அவரது தந்தை சரவணன் நேற்று இரவே சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று ராகுல் அவரது தந்தை டேவிஸ் மற்றும் அபிராமி அவரது தந்தை மாதவன் ஆகிய நால்வரும் இன்று சிறைக்கு செல்கிறார்கள்.
தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று 6 பேர் அழைத்து வரப்பட்டனர். சென்னை சத்யசாய் மருத்துவ கல்லூரியை சேர்ந்த அபிராமி அவரது தந்தை மாதவன், பாலாஜி மருத்துவக் கல்லூரியை சேர்ந்த அவரது தந்தை டேவிஸ், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பிரவீன் அவரது தந்தை சரவணன் ஆகியோர் அழைத்து வரப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டனர். இதில் மாதவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சற்று தாமதமாக அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து நேற்று இரவு 8 மணி அளவில் பிரவீன் அவரது தந்தை சரவணன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் இருவரையும் தேனி சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இருவரும் தேனி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள அபிராமி அவரது தந்தை மாதவன்,ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. நால்வரும் என்று சிறை செல்வார் கள் என்கிறது சிபிசிஐடி.
இதெல்லாம் ஒருபுறம் என்றால் அபிராமி, ராகுல், பிரவீன் ஆகியோர் படித்த மருத்துவ கல்லூரி முதல்வர்களை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது சிபிசிஐடி. இதில் எஸ்ஆர்எம் கல்லூரி முதல்வர் சுந்தரம், பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாய்குமார் ஆகியோர் இதுவரைஆஜராகி விளக்கம் கொடுத்தது மட்டுமல்லாமல் மாணவர்களின் ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது சத்யசாய் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் பிரேம்நாத் தற்போது ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். இவருக்கு முன்னதாக அக்கல்லூரியின் கண்காணிப்பாளர் சுகுமாரன் அண்ணாமலை சிபிசிஐடியினரிடம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.



Conclusion: விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இவை அனைத்திலும் தொடர்புடைய இடைத்தரகர்களை தேடும் பணியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.