ETV Bharat / state

'குடும்பத்துடன் தற்கொலை செய்ய துணிந்தோம்' - விசாரணையில் உதித்சூர்யா தகவல்!

author img

By

Published : Sep 27, 2019, 3:29 PM IST

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்டதால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோம் என உதித் சூர்யா விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Uditsuriya

தேனி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரிடமும் தேனியில் இன்று சிபிசிஐடியினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதித்சூர்யா கூறியதாவது, "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது வெளியில் தெரிந்து மாட்டிக்கொண்டதால், என் குடும்பம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானது.

இதனால், நாங்கள் காவல்துறைக்கு பயந்து ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த வேளையில் என் தந்தை குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதற்காக விஷஊசிகளை வாங்கினார். எனக்கு சாக விருப்பமில்லை, எனவே இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அதனால் தற்கொலை முயற்சி கைவிடப்பட்டது' இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'நீட் ஆள்மாறாட்ட வழக்கு; இடைத்தரகர் யாரும் கைது செய்யப்படவில்லை!'

தேனி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் இருவரிடமும் தேனியில் இன்று சிபிசிஐடியினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் உதித்சூர்யா கூறியதாவது, "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது வெளியில் தெரிந்து மாட்டிக்கொண்டதால், என் குடும்பம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானது.

இதனால், நாங்கள் காவல்துறைக்கு பயந்து ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த வேளையில் என் தந்தை குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதற்காக விஷஊசிகளை வாங்கினார். எனக்கு சாக விருப்பமில்லை, எனவே இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். அதனால் தற்கொலை முயற்சி கைவிடப்பட்டது' இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'நீட் ஆள்மாறாட்ட வழக்கு; இடைத்தரகர் யாரும் கைது செய்யப்படவில்லை!'

Intro: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிக்கிக்கொண்டதால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிக்கு முயன்ற உதித்சூர்யா. சிபிசிஐடி விசாரணையில் தகவல்.
Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்ட தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில் சிக்கிக்கொண்டதால் தலைமறைவாக ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில், குடும்பத்துடன் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொள்ள தனது தந்தை மருத்துவர் வெங்கடேசன் முடிவு செய்ததாகவும், உதித்சூர்யா மறுப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என கூறியதனால் தற்கொலை முயற்சி கைவிடப்பட்டதாகவும் விசாரணையில் கூறியுள்ளனர்.Conclusion: விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.