ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரில் ஆஜர்!

author img

By

Published : Oct 1, 2019, 1:45 PM IST

தருமபுரி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கின் விசாரணைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

theni mc dean

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் நான்கு மாணவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள மூன்று தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்து வந்த ஒரு மாணவி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தேனியில் விசாரணை நடத்தினர். அவர்களோடு அவர்களின் கல்லூரி முதல்வர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவின், எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் ராகுல் ஆகிய இருவர் ஆள்மாறாட்டம் செய்தது முதற்கட்டமாக உறுதியானதையடுத்து இரு மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி விடுவிக்கப்பட்டார்.

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரில் ஆஜர்

இதனைத்தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் இர்பான் என்பவர் மீதும் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஆள்மாறாட்டம் தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபசிஐடி நேற்று சம்மன் அனுப்பியது. அதன்படி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் தற்போது தேனியில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் அவர் விளக்கம் அளித்துவருகின்றார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மேலும் நான்கு மாணவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள மூன்று தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்து வந்த ஒரு மாணவி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் தேனியில் விசாரணை நடத்தினர். அவர்களோடு அவர்களின் கல்லூரி முதல்வர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவின், எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் ராகுல் ஆகிய இருவர் ஆள்மாறாட்டம் செய்தது முதற்கட்டமாக உறுதியானதையடுத்து இரு மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி விடுவிக்கப்பட்டார்.

தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரில் ஆஜர்

இதனைத்தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் இர்பான் என்பவர் மீதும் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஆள்மாறாட்டம் தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபசிஐடி நேற்று சம்மன் அனுப்பியது. அதன்படி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் தற்போது தேனியில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் அவர் விளக்கம் அளித்துவருகின்றார்.

Intro: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு..
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தேனியில் சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜர்.


Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் 4மாணவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள 3தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்து வந்த 1மாணவி உள்பட 3பேரிடம் சிபிசிஐடி போலீசார் தேனியில் விசாரணை நடத்தினர். மேலும் அக்கல்லூரி முதல்வர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவின், எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர் ராகுல் ஆகிய இருவர் ஆள்மாறாட்டம் செய்தது முதற்கட்டமாக உறுதியானதையடுத்து இரு மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி விடுவிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் இர்பான் என்பவர் மீதும் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கல்லூரியில் அந்த மாணவரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், அவர் தலைமறைவாகி மொரீசியஸ் நாட்டிற்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக மாணவரின் தந்தை முகம்மதுசபியிடம் நேற்று முதல் தேனி யில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆள்மாறாட்டம் தொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபசிஐடி நேற்று சம்மன் அனுப்பியது. அதன்படி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜ் தற்போது தேனியில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளித்து வருகின்றார். அதேபோல் தலைமறைவாகியுள்ள மாணவரின் தந்தை முகம்மதுசபியிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றன. மேலும் தலைமறைவாகியுள்ள மாணவர் இர்பானை பிடிப்பதற்கும் தனிப்படை சிபிசிஐடி போலீசார் மொரீசியஸ் நாட்டிற்கு விரைந்துள்ளனர்.


Conclusion: விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் முகம்மது சபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.