ETV Bharat / state

கோயில் கலயத்தில் ஊற்றினால் மதுவின் வாசம் மறையும் அபூர்வம்! - alcohol smell removed by kalayam

தேனி: குச்சனூரில் உள்ள ஒரு கோயிலின் கலயத்தில் மதுவை ஊற்றினால், அதன் வாசம் மறைந்துபோகும் அதிசயம் நடப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில்
author img

By

Published : Aug 13, 2019, 9:15 AM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி சனி வாரத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, சாமிக்குப் பொங்கல் வைத்து கிடாய் வெட்டியும், மதுபானங்கள் படைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில்

பின்னர், கோயில் கதவுகள் மூடப்பட்டு சுவாமி சிலைக்குக் கீழே உள்ள கலயத்தில் ஊற்றப்படும். இவ்வாறு ஊற்றப்படும் மதுபானங்கள் வாசம் தெரியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சாமிக்கு மதுபானங்கள் படைத்து வழிபடுவதால் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி சனி வாரத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, சாமிக்குப் பொங்கல் வைத்து கிடாய் வெட்டியும், மதுபானங்கள் படைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில்

பின்னர், கோயில் கதவுகள் மூடப்பட்டு சுவாமி சிலைக்குக் கீழே உள்ள கலயத்தில் ஊற்றப்படும். இவ்வாறு ஊற்றப்படும் மதுபானங்கள் வாசம் தெரியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சாமிக்கு மதுபானங்கள் படைத்து வழிபடுவதால் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.

Intro:         குச்சனூரில் சோனை முத்துகருப்பணசாமிக்கு 2700மதுபானங்கள் படைத்து பக்தர்கள் வழிபாடு. பக்தர்களால் வழங்;கப்பட்ட ஆடு, கோழி, மதுபானங்கள் படைத்து சுவாமி தரிசனம்.
Body: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி சனிவாரத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு இங்குள்ள சோனை முத்து கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து, கிடாய்; வெட்டியும், மதுபானங்;கள் படைத்தும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
         ஆடிமாத கடைசி திங்களன்று நடைபெற்ற இந்த வழிபாட்டில் பூக்களால் அலங்கரிக்கபட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.         பின்னர் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்ற மதுபானங்கள் படைத்து, ஆடு, கோழிகளின் கறி விருந்து படையிலிட்டும் வழிபாடு நடத்தப்பட்டன. இதில் பெண்கள், குழந்தைகள் என பக்தர்களால் சுமார் 2700 மதுபான பாட்டில்கள் வரை பெறப்பட்டன. மேலும் பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட 43ஆடுகள், 47கோழிகள் வெட்டப்பட்டு கறிவிருந்து படைக்கப்பட்டன.
         மதுபானங்கள் அனைத்தும் சுவாமிக்கு முன்பாக அடுக்கி வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின் கோவில் கதவுகள் மூடப்பட்டு சுவாமி சிலைக்கு கீழே உள்ள களயத்தில் ஊற்றப்படும். இவ்வாறு ஊற்றப்படும் மதுபானங்கள் வாசம் தெரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மதுபானங்கள் அனைத்தும் ஊற்றப்படும் போது களயம் நிறையாமல் இருப்பதகவும,; அவ்வாறு ஊற்றப்படும் மதுபானங்கள் அனைத்தையும் கருப்பசாமியே குடிப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது. சுவாமிக்கு மதுபானங்கள் படைத்து வழிபடுவதால் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


Conclusion: இவ்விழாவில் சமைக்கப்பட்ட கறிவிருந்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.