ETV Bharat / state

விளைச்சல் இருந்தும் விலையில்லாத கோவங்காய்: விவசாயிகள் கவலை - kovakkai Harvesting, farmers' concern

தேனி: விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காமல் கோவங்காய் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விளைச்சல் இருந்தும் விலையில்லாத கோவங்காய்: விவசாயிகள் கவலை!
விளைச்சல் இருந்தும் விலையில்லாத கோவங்காய்: விவசாயிகள் கவலை!
author img

By

Published : Feb 4, 2020, 3:01 PM IST

தேனி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம், ஸ்ரீரெங்கபுரம், வெங்கடாசலபுரம், குப்பிநாயக்கன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கோவங்காய் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகின்ற கோவங்காய் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பிற மாவட்ட சந்தைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக தேனி மாவட்ட விவசாயிகள் ஆண்டு தோறும் கோவங்காய் சாகுபடியில் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விளைவித்த கோவங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர். விதையாக நடவு செய்யப்பட்டு, பின் கொடியாகப் படர்ந்து 12 மாதங்கள் வரை வளரும் கோவங்காய்ங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுபோன்று விலை ஏற்ற இறக்கங்கள், விளைச்சல் பாதிப்பு போன்றவைகளை சமாளிப்பதற்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம், ஸ்ரீரெங்கபுரம், வெங்கடாசலபுரம், குப்பிநாயக்கன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கோவங்காய் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகின்ற கோவங்காய் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பிற மாவட்ட சந்தைகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக தேனி மாவட்ட விவசாயிகள் ஆண்டு தோறும் கோவங்காய் சாகுபடியில் ஆர்வம் செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விளைவித்த கோவங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர். விதையாக நடவு செய்யப்பட்டு, பின் கொடியாகப் படர்ந்து 12 மாதங்கள் வரை வளரும் கோவங்காய்ங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுபோன்று விலை ஏற்ற இறக்கங்கள், விளைச்சல் பாதிப்பு போன்றவைகளை சமாளிப்பதற்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: காஞ்சிபுரத்தில் 3 பேர் கைது

Intro: விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காமல் ரூ.10க்கு கொள்முதல் செய்யப்படுவதால் கோவங்காய் பியிரிட்ட தேனி விவசாயிகள் கவலை.


Body: தேனி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம், ஶ்ரீரெங்கபுரம், வெங்கடாசலபுரம், குப்பிநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கோவங்காய் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகின்ற கோவங்காய் தேனி மாவட்டமின்றி மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பிற மாவட்ட சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தேனி மாவட்ட விவசாயிகள் கோவங்காய் சாகுபடியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விளைவித்த கோவங்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பலர் கவலையடைந்துள்ளனர். விதையாக நடவு செய்து, கொடியாக படர்ந்து வளர்கின்ற செடிகளை என முறையாக பராமரிப்பதனால் 12மாதங்கள் வரை காய்கள் அறுவடையாகின்றன. இவ்வாறு வருடம் முழுவதும் அறுவடையாகின்ற உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
இது குறித்து அம்பாசமுத்திரம் பகுதி விவசாயி கூறுகையில், விதை, உரம், மருந்து, களையெடுத்தல் என ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் கொள்முதல் விலையோ கிலோ ரூ.10 முதல் 15 வரை மட்டுமே கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.35க்கு கொள்முதல் ஆனது. ஆனால் அந்த பருவத்தில் வெள்ளைப்பூச்சி தாக்குதலால் உற்பத்தி பாதிப்படைந்து விளைச்சலின்றி காணப்பட்டது. 4நாட்களுக்கு ஒரு முறை ஆயிரம் கிலோ வரை அறுவடையாகின்ற காய்கள், 600கிலோ மட்டுமே பறிக்க முடிந்தது. தற்போது நோய் தாக்குதல் சரியாகி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை இல்லாதது வருத்தமடையச் செய்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


Conclusion: விலை ஏற்ற, இறக்கங்கள் மற்றும் விளைச்சல் பாதிப்பு போன்றவைகளை சமாளிப்பதற்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

பேட்டி : 1) அருண் வெங்கடேஷ் ( விவசாயி, அம்பாசமுத்திரம்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.