ETV Bharat / state

ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் ஆய்வு

author img

By

Published : Aug 6, 2019, 5:47 PM IST

தேனி: குடிமராமத்துப் பணிகளை நீர் ஆற்றல் துறையைச் (ஜல்சக்தி அபியான்) சேர்ந்த திட்டக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர்

தண்ணீர் பிரச்னையைப் போக்கவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் நீர் ஆற்றல் துறையை மத்திய அரசு உருவாக்கியது. இத்துறையின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீர் சேகரிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தேனி மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய் ஆகியவற்றின் நீர்வழிப்பாதை, கரை உயர்த்துதல், கண்மாயை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

விவசாயிகள் கோரிக்கை

இந்நிலையில், நீர் ஆற்றல் துறையின் திட்டக்குழுவினர் தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பூதிப்புரம் பகுதியில் உள்ள ராஜபூபால சமுத்திரம் கண்மாயில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்தனர்.

இதில், மத்திய ஒருங்கிணைப்புக்குழு அலுவலர் அசோக்குமார் ஆர். பர்மர், வட்டார ஒருங்கிணைப்பு அலுவலர் சுதீப் ஸ்ரீவத்சவா, மத்திய நிலத்தடி நீர் வளர்ச்சித் துறை தொழில்நுட்ப அலுவலர் ஶ்ரீநிவாஸ் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுடன் இணைந்து குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிட்டனர்.

ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் ஆய்வு

ஆய்வின்போது அங்கிருந்த விவசாயிகள் அலுவலர்களிடம், கண்மாயின் நீர் வழித்தடத்தில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தும்படி கோரிக்கைவிடுத்தனர்.

தண்ணீர் பிரச்னையைப் போக்கவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் நீர் ஆற்றல் துறையை மத்திய அரசு உருவாக்கியது. இத்துறையின் கீழ் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தண்ணீர் சேகரிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தேனி மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இம்மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய் ஆகியவற்றின் நீர்வழிப்பாதை, கரை உயர்த்துதல், கண்மாயை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

விவசாயிகள் கோரிக்கை

இந்நிலையில், நீர் ஆற்றல் துறையின் திட்டக்குழுவினர் தேனி மாவட்டம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பூதிப்புரம் பகுதியில் உள்ள ராஜபூபால சமுத்திரம் கண்மாயில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்தனர்.

இதில், மத்திய ஒருங்கிணைப்புக்குழு அலுவலர் அசோக்குமார் ஆர். பர்மர், வட்டார ஒருங்கிணைப்பு அலுவலர் சுதீப் ஸ்ரீவத்சவா, மத்திய நிலத்தடி நீர் வளர்ச்சித் துறை தொழில்நுட்ப அலுவலர் ஶ்ரீநிவாஸ் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுடன் இணைந்து குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிட்டனர்.

ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் ஆய்வு

ஆய்வின்போது அங்கிருந்த விவசாயிகள் அலுவலர்களிடம், கண்மாயின் நீர் வழித்தடத்தில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தும்படி கோரிக்கைவிடுத்தனர்.

Intro: தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடி மராமத்து பணிகளை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் பார்வையிட்டனர். வாழையாறு தடுப்பணை உயரத்தை அதிகரிக்கக் கோரி அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையீடு.


Body: தேனி மாவட்டத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடி மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள குளம், கண்மாய் ஆகியவற்றின் நீர்வழிப்பாதை, கரையை உயர்த்துதல், கண்மாயை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டக்குழு வினர் இந்த குடி மராமத்து பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். மத்திய ஒருங்கிணைப்புக்குழு அலுவலராக உள்ள மத்திய தகவல் தொடர்புத் துறை துணை செயலர் அசோக்குமார் ஆர்.பர்மர், வட்டார ஒருங்கிணைப்பு அலுவலராக உள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் சுதீப் ஸ்ரீவத்சவா மற்றும் மத்திய நிலத்தடி நீர் வளர்ச்சித் துறை தொழில்நுட்ப அலுவலர் ஶ்ரீநிவாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுடன் இணைந்து குடிமராமத்து பணிகளை பார்வையிட்டனர்.
போடி தாலுகாவிற்கு உட்பட்ட பூதிப்புரம் பகுதியில் உள்ள ராஜபூபால சமுத்திரம் கண்மாயில் மேற்கொண்டு வரும் மராமத்துப் பணிகளை இக்குழுவினர் பார்வையிட்டு ஆட்சியருடன் கலந்துரையாடினர். ரூ.35 லட்சம் மதிப்பீட்டில், கண்மாயை தூர்வாரி, கரையை பலப்படுத்துதல், மடை பழுது பார்த்து ஷட்டர் அமைக்கும் பணிகள், வாழையாறு அணைக்கட்டு முதல் கண்மாயின் நீர்வரத்து வரையுள்ள வரத்துக் கால்வாயை தூர்வாருதல், உள்ளிட்ட பணிகள் குறித்து ஆட்சியரிடம் கேட்டறிந்தனர்.
இதனிடையே அங்கிருந்த விவசாயிகள், கண்மாயின் நீர் வழித்தடத்தில் உள்ள தடுப்பணை மற்றும் ஷட்டர் பகுதிகளின் உயரத்தை உயர்த்தும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயின் நீர் தேக்க அளவிற்கு தகுந்தபடி தான் தடுப்பனையின் உயரம் அமைக்கப்படும் என்றனர்.
ஆனால் இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சுமார் 174 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாயின் மூலம் பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மழை காலங்களில் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்ற இதன் வழித்தடத்தில் உள்ள ஷட்டர்கள் மாற்றம் தடுப்பணை ஆகியவற்றின் உயரத்தை அதிகரிப்பதன் மூலம் கூடுதலாக கண்மாயில் தண்ணீர் தேக்க முடியும்.
வீணாக கொட்டகுடி ஆற்றில் கலந்து வெள்ளமாக செல்வதை தடுத்து பற்றாக்குறை நேரங்களில் உபயோகித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். மேலும் கூடுதலாக தண்ணீர் தேக்குவதற்கு இக்கண்மாயில் இடம் உள்ளதாகவும், உபரி நீரை மதகு வழியாக சிறு குளங்களுக்கு நீர் வெளியேற்ற முடியும் என்று கருத்து தெரிவித்தனர்



Conclusion: எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கண்மாயின் வழித்தடத்தில் உள்ள தடுப்பணை மற்றும் ஷட்டர் பகுதிகளின் உயரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

பேட்டி : 1) செல்வராணி ( விவசாயி - பூதிப்புரம்)
2) ராஜகோபால் ( விவசாயி - பூதிப்புரம்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.