ETV Bharat / state

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவர் கைது!

author img

By

Published : Nov 25, 2019, 10:51 AM IST

தேனி: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

wife murder

தேனி மாவட்டம் தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(34). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி(29) என்பவருடன் திருமணமாகி 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த தம்பதியினர் கேரள மாநிலம் கூட்டாறு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துவருகின்றனர். இவர்களின் 2 மகன்களும் ராஜேஸ்வரியின் தந்தை வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் தங்கி பணிபுரிந்து வந்த சமயத்தில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சண்முகம் வழக்கம்போல் நேற்று முன்தினம் தனது மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, நேற்றிரவு தேவாரத்திற்கு வந்த சண்முகம், மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஸ்வரியை சராமாறியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைக்கண்ட பெற்றோர் ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை கொலை செய்த கணவர்

இதுகுறித்து ராஜேஸ்வரியின் தாய் காந்திமதி தேவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், தலைமறைவான சண்முகத்தை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், இன்று காலை கேரளாவிற்கு தப்பிச் செல்வதற்காக தேவாரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனிடையே இறந்தவரின் சடலம் உடற்கூறாய்விற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் காவல்துறையினர் சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் தேவாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

மனைவியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த ஆட்டோ டிரைவர்!

தேனி மாவட்டம் தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(34). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி(29) என்பவருடன் திருமணமாகி 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த தம்பதியினர் கேரள மாநிலம் கூட்டாறு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துவருகின்றனர். இவர்களின் 2 மகன்களும் ராஜேஸ்வரியின் தந்தை வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் தங்கி பணிபுரிந்து வந்த சமயத்தில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட தம்பதியினரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சண்முகம் வழக்கம்போல் நேற்று முன்தினம் தனது மனைவியை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி தனது தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, நேற்றிரவு தேவாரத்திற்கு வந்த சண்முகம், மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஸ்வரியை சராமாறியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைக்கண்ட பெற்றோர் ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

மனைவியை கொலை செய்த கணவர்

இதுகுறித்து ராஜேஸ்வரியின் தாய் காந்திமதி தேவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், தலைமறைவான சண்முகத்தை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், இன்று காலை கேரளாவிற்கு தப்பிச் செல்வதற்காக தேவாரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனிடையே இறந்தவரின் சடலம் உடற்கூறாய்விற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் காவல்துறையினர் சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் தேவாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

மனைவியை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த ஆட்டோ டிரைவர்!

Intro: நடத்தையில் சந்தேகம் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவன். தேவராம் காவல் துறையினர் விசாரணை.
Body:          தேனி மாவட்டம் தேவாரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(34). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாலுவின் மகள் ராஜேஸ்வரி(29) என்பவருடன் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இத்தம்பதியினர் கேரள மாநிலம் கூட்டாறு பகுதியில் ஏலக்காய் தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் 2 மகன்களும் தேவாரத்தில் உள்ள ராஜேஸ்வரியின் தந்தை வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் தங்கி வேலை பார்த்த வந்த சமயத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை வந்தாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தனது மனைவியை சந்தேகப்பட்டு சண்முகம் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் தேவராத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு ராஜேஸ்வரி வந்துள்ளார். இதனயைடுத்து நேற்றிரவு தேவாரத்திற்கு வந்த சண்முகம், மனைவியின் தந்தை வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார்.
ஒருகட்டத்தில் சண்டை முற்றியதில் மறைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஸ்வரியை சராமாறியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த அவரது பெற்றோர் தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பரிதாபமாக ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ராஜேஸ்வரியின் அம்மா காந்திமதி தேவாரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தலைமறைவான சண்முகத்தை தேடி வந்த நிலையில் இன்று காலை கேரளாவிற்கு தப்பிச் செல்வதற்காக தேவாரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை சுற்றி வளைத்த காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தேவாரம் காவல்துறையினர் சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Conclusion: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் தேவாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.