ETV Bharat / state

தேனி: 6 மாதமாக இருளில் தவிக்கும் மலை கிராம மக்கள்!

author img

By

Published : Nov 28, 2022, 7:01 PM IST

மின் மாற்றி பழுதை சீரமைக்காததால் மேற்கு தொடர்ச்சி மலையில் அகமலை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் 6 மாத காலமாக இருளில் மூழ்கியுள்ளனர்.

மின் மாற்றி பழுதடைந்ததால் 6 மாதமாக இருளில் முழ்கியுள்ள மலை கிராமங்கள்
மின் மாற்றி பழுதடைந்ததால் 6 மாதமாக இருளில் முழ்கியுள்ள மலை கிராமங்கள்

தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் போடி தாலுக்காவிற்கு உட்பட்ட மலை கிராம பகுதியாக உள்ளது அகமலை கிராமம். இந்த அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு கருங்கல்காடு, குரவன்குழி உட்பட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சார வசதிகள் பெரியகுளத்தில் உள்ள மின் கம்பங்கள் மூலமாக செல்கிறது. இந்நிலையில் ஊரடி, ஊத்துக்காடு பகுதியில் கடந்த சில மாதங்களாக அங்கு உள்ள மின் மாற்றியில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுள்ளதால், கடந்த 6 மாதமாக மின்சாரம் இல்லாமல் மலை கிராம மக்கள் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மின்சாரம் இல்லாத நிலையில், மலை கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும், அவசர மருத்துவ தேவைக்கு கூட உதவி கேட்க முடியாத நிலையில் இருப்பதாகவும், வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உள்ளனர். மேலும் பழுதை நீக்க தற்காலிக பணியாளர் நியமித்தும் மின் மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கம் செய்ய வருவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே மலை கிராமங்களில் மின்சார தடை ஏற்பட்டால் பழுதை நீக்க நிரந்தர பணியாளர்களை நியமித்து தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் மாற்றி பழுதடைந்ததால் 6 மாதமாக இருளில் முழ்கியுள்ள மலை கிராமங்கள்

இதுகுறித்து பெரியகுளம் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது மலை கிராமங்களில் ஏற்பட்டுள்ள மின்தடையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் தகராறு: மகள் தற்கொலை - மனைவி கவலைக்கிடம்..

தேனி: பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் போடி தாலுக்காவிற்கு உட்பட்ட மலை கிராம பகுதியாக உள்ளது அகமலை கிராமம். இந்த அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு கருங்கல்காடு, குரவன்குழி உட்பட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சார வசதிகள் பெரியகுளத்தில் உள்ள மின் கம்பங்கள் மூலமாக செல்கிறது. இந்நிலையில் ஊரடி, ஊத்துக்காடு பகுதியில் கடந்த சில மாதங்களாக அங்கு உள்ள மின் மாற்றியில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுள்ளதால், கடந்த 6 மாதமாக மின்சாரம் இல்லாமல் மலை கிராம மக்கள் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் மின்சாரம் இல்லாத நிலையில், மலை கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுவதாகவும், அவசர மருத்துவ தேவைக்கு கூட உதவி கேட்க முடியாத நிலையில் இருப்பதாகவும், வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உள்ளனர். மேலும் பழுதை நீக்க தற்காலிக பணியாளர் நியமித்தும் மின் மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கம் செய்ய வருவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே மலை கிராமங்களில் மின்சார தடை ஏற்பட்டால் பழுதை நீக்க நிரந்தர பணியாளர்களை நியமித்து தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் மாற்றி பழுதடைந்ததால் 6 மாதமாக இருளில் முழ்கியுள்ள மலை கிராமங்கள்

இதுகுறித்து பெரியகுளம் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது மலை கிராமங்களில் ஏற்பட்டுள்ள மின்தடையை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடன் தொல்லையால் தகராறு: மகள் தற்கொலை - மனைவி கவலைக்கிடம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.