ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை - மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை

தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு
author img

By

Published : Sep 24, 2019, 5:31 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 126அடி ஆகும். கடந்த சில தினங்களாக போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கி ஓரிரு நாளில் முற்றிலும் நின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நேற்று பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 28மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் அணைக்கு விநாடிக்கு 39 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதையும் படிங்க: கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவை எட்டியது!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 126அடி ஆகும். கடந்த சில தினங்களாக போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கி ஓரிரு நாளில் முற்றிலும் நின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நேற்று பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 28மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் அணைக்கு விநாடிக்கு 39 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதையும் படிங்க: கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை முழு கொள்ளளவை எட்டியது!

Intro: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு. ஒரே நாளில் 3அடி வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி.


Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது சோத்துப்பாறை அணை. அணையின் மொத்தக்கொள்ளளவு நீர்மட்டம் 126அடி ஆகும். கடந்த சில தினங்களாக போதிய அளவு மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறையத்தொடங்கி ஒரிரு நாளில் முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறையத்தொடங்கியது.
இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அகமலை உள்ளிட்ட அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தற்போது அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 3அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 28மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் அணைக்கு விநாடிக்கு 39கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை 86.10அடியாக இருந்த அணையின் நீர்மட்டம்
இன்று காலை நிலவரப்படி அணையின் 89.05அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 48.15மி.கன அடியாக இருக்கின்றது. பெரியகுளம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அனையில் இருந்து 3கன அடி நீர் திறக்கப்படுகிறது.


Conclusion: தொடர்ந்து இதேபோல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வந்தால் அணையின் நீர்மட்டம் உயரந்து முழுக்கொள்ளளவை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.