ETV Bharat / state

தேனியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பதுக்கிய கும்பல் கைது!

author img

By

Published : Jun 9, 2023, 9:21 AM IST

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாக்களை பதுக்கி வைத்த கும்பலிடம் இருந்து 600 கிலோ மதிப்பிலான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

600 கிலோ மதிப்பிலான குட்கா, பான் மசாலாக்கள் பதுக்கிய கும்பல் கைது!
600 கிலோ மதிப்பிலான குட்கா, பான் மசாலாக்கள் பதுக்கிய கும்பல் கைது!

தேனி: கொடுவிலார் பட்டியில் உள்ள ஐஸ்வர்யா நகர்ப் பகுதியில், தனியார் குடோன் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. எனவே, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சுமார் இரண்டு நாட்கள் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே தலைமையிலான தனிப்படையினர், சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டு, தீவிரமாகக் கண்காணித்து வந்தது தெரியாமல் குடோனில் குட்கா, பான் மசாலா எடுக்க வந்த அதன் உரிமையாளர் குமரேசன் காவல் துறையினரிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். இதனை அடுத்து, அவரை குடோனில் வைத்து சுமார் 300 கிலோ மதிப்பிலான குட்கா பான் மசாலாக்களுடன் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் கடத்தலுக்குப் பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குமரேசனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த முத்தீஸ்வரன் என்பவர் வீட்டில் குட்கா, பான் மசாலா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, அங்குச் சோதனை மேற்கொண்டு அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 100 கிலோ குட்கா பான் மசாலாக்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: Mumbai Murder: லிவ் இன் பார்ட்னரை கூறுபோட்டு குக்கரில் வேக வைத்த கொடூரம்!

மேலும், இவர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த அருள் என்பவர் வீட்டிலும், குச்சனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டதில் சுமார் 200 கிலோ குட்கா பான் மசாலாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் சோதனை நடைபெறப்போகும், தகவல் அறிந்த இருவரும் காவல் துறையிடம் சிக்காமல் தலைமறைவாகினர். இந்நிலையில், தனிப்படையினர் அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் மேற்கொண்ட இரண்டு நாள் சோதனையில் சுமார் 600 கிலோ குட்கா, பான் மசாலாக்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த நான்கு நபர்கள் மீதும் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவான இருவரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Vellore Aavin: 2 பால் விநியோகிப்பாளர்களின் ஒப்பந்தம் ரத்து.. தனியார் காவல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

தேனி: கொடுவிலார் பட்டியில் உள்ள ஐஸ்வர்யா நகர்ப் பகுதியில், தனியார் குடோன் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் வந்துள்ளது. எனவே, கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சுமார் இரண்டு நாட்கள் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே தலைமையிலான தனிப்படையினர், சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டு, தீவிரமாகக் கண்காணித்து வந்தது தெரியாமல் குடோனில் குட்கா, பான் மசாலா எடுக்க வந்த அதன் உரிமையாளர் குமரேசன் காவல் துறையினரிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். இதனை அடுத்து, அவரை குடோனில் வைத்து சுமார் 300 கிலோ மதிப்பிலான குட்கா பான் மசாலாக்களுடன் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் கடத்தலுக்குப் பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குமரேசனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த முத்தீஸ்வரன் என்பவர் வீட்டில் குட்கா, பான் மசாலா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, அங்குச் சோதனை மேற்கொண்டு அவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் 100 கிலோ குட்கா பான் மசாலாக்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: Mumbai Murder: லிவ் இன் பார்ட்னரை கூறுபோட்டு குக்கரில் வேக வைத்த கொடூரம்!

மேலும், இவர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த அருள் என்பவர் வீட்டிலும், குச்சனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொண்டதில் சுமார் 200 கிலோ குட்கா பான் மசாலாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் சோதனை நடைபெறப்போகும், தகவல் அறிந்த இருவரும் காவல் துறையிடம் சிக்காமல் தலைமறைவாகினர். இந்நிலையில், தனிப்படையினர் அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் மேற்கொண்ட இரண்டு நாள் சோதனையில் சுமார் 600 கிலோ குட்கா, பான் மசாலாக்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏசி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த நான்கு நபர்கள் மீதும் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவான இருவரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: Vellore Aavin: 2 பால் விநியோகிப்பாளர்களின் ஒப்பந்தம் ரத்து.. தனியார் காவல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.