ETV Bharat / state

ஆட்டை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பு! - goat swallowed by Python video

தேனி: கம்பம் ஒட்டுகுளம் பகுதியில் ஆட்டை விழுங்கிய 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

python swallowed the goat
author img

By

Published : Nov 15, 2019, 11:59 PM IST

தேனி மாவட்டம் ஒட்டுகுளம் பகுதியிலுள்ள செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, தனது ஆடு ஒன்று காணாமல்போனதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியுள்ளார்.

அப்போது குளத்தின் அருகே ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிய நிலையில் படுத்திருந்ததைக் கண்டு அவர் பீதி அடைந்துள்ளார். உடனே இது குறித்து வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

கம்பம் பகுதியில் ஆட்டை விழுங்கிய 12அடி நீள மலைப்பாம்பு

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்புத் துறையினர், 12 நீடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஆட்டை வெளியில் எடுத்தனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இதையும் படிங்க: கோவையில் பிடிபட்டது 16 அடி ராஜநாகம்!

தேனி மாவட்டம் ஒட்டுகுளம் பகுதியிலுள்ள செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, தனது ஆடு ஒன்று காணாமல்போனதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியுள்ளார்.

அப்போது குளத்தின் அருகே ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிய நிலையில் படுத்திருந்ததைக் கண்டு அவர் பீதி அடைந்துள்ளார். உடனே இது குறித்து வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

கம்பம் பகுதியில் ஆட்டை விழுங்கிய 12அடி நீள மலைப்பாம்பு

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்புத் துறையினர், 12 நீடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றில் இறந்த நிலையில் இருந்த ஆட்டை வெளியில் எடுத்தனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இதையும் படிங்க: கோவையில் பிடிபட்டது 16 அடி ராஜநாகம்!

Intro: கம்பத்தில் ஊருக்குள் புகுந்த 12 அடி நீளம் மலைப்பாம்பு - ஆட்டுக்குட்டியை விழுங்கியதால் பரபரப்பு.
Body:         தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஒட்டு குளம் எனும் இடத்தில் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தனது ஆடு ஒன்று காணாமல் போனது தெரிய வந்ததையடுத்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிக்கொண்டிருந்தார். அப்போது குளத்தின் அருகே ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிய நிலையில் படுத்திருந்ததை கண்டு பீதி அடைந்தார்.
         உடனே வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார்;. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்பம் தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை பிடித்தனர். சுமார் 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பின் வயிற்றில் இருந்த ஆடு இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டது.
         இதனையடுத்து பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டன.
         Conclusion: கால்நடைகளை அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.