ETV Bharat / state

ஏலச்செடிகளில் தட்டை அழுகல் நோய்; தேனி மாவட்ட விவசாயிகள் வேதனை!

author img

By

Published : Jul 25, 2022, 4:10 PM IST

தமிழ்நாடு - கேரள எல்லையில் பெய்து வரும் பருவ மழையால் ஏலச்செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதால் ஏலக்காய் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

ஏலச்செடிகளில் தட்டை அழுகல் நோய்; விவசாயிகள் வேதனை
ஏலச்செடிகளில் தட்டை அழுகல் நோய்; விவசாயிகள் வேதனை

தேனி: தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு மற்றும் அதனை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஏலத்தோட்டங்களில் கேரள மாநிலத்தவரும் தேனி மாவட்ட விவசாயிகளும் ஆண்டுதோறும் ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் ஏலச்செடிகளில் ஏலக்காய்கள் நன்கு விளைந்து அறுவடை செய்யப்படும் தருணத்தில் வேர் அழுகல் மற்றும் தட்டை அழுகல் நோய் அதிகரித்து வருகிறது. இதனால் விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது நடுத்தரமான விலைக்கு ஏலக்காய்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வந்தும் செடிகளில் ஏற்பட்ட நோய்த்தாக்குதலால் இந்தப்பருவத்தில் விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏலச்செடிகளில் தட்டை அழுகல் நோய்; விவசாயிகள் வேதனை

இந்தப்பருவத்தில் ஏலக்காயை விளைவிக்க அதிகமானப்பணம் செலவழித்து, ஏலத்தோட்டங்களில் மருந்து தெளித்தல் போன்ற மராமத்துப்பணிகள் செய்தும் உரிய வருமானத்தை எடுக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக ஏல விவசாயிகள் மன வேதனை அடைந்து அரசு இழப்பீடு தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தேனி: தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு மற்றும் அதனை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள ஏலத்தோட்டங்களில் கேரள மாநிலத்தவரும் தேனி மாவட்ட விவசாயிகளும் ஆண்டுதோறும் ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் ஏலச்செடிகளில் ஏலக்காய்கள் நன்கு விளைந்து அறுவடை செய்யப்படும் தருணத்தில் வேர் அழுகல் மற்றும் தட்டை அழுகல் நோய் அதிகரித்து வருகிறது. இதனால் விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தற்போது நடுத்தரமான விலைக்கு ஏலக்காய்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வந்தும் செடிகளில் ஏற்பட்ட நோய்த்தாக்குதலால் இந்தப்பருவத்தில் விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏலச்செடிகளில் தட்டை அழுகல் நோய்; விவசாயிகள் வேதனை

இந்தப்பருவத்தில் ஏலக்காயை விளைவிக்க அதிகமானப்பணம் செலவழித்து, ஏலத்தோட்டங்களில் மருந்து தெளித்தல் போன்ற மராமத்துப்பணிகள் செய்தும் உரிய வருமானத்தை எடுக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக ஏல விவசாயிகள் மன வேதனை அடைந்து அரசு இழப்பீடு தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.