ETV Bharat / state

தேனி ஆட்சியரிடம் இனி மனு அளிக்க மாட்டோம் - விவசாயிகள் தீர்மானம்

author img

By

Published : Oct 17, 2020, 7:50 PM IST

தேனி: சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கவந்த ஐந்து மாவட்ட விவசாயிகளிடம் ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பிறகும் மனு வாங்க மறுத்ததாக தேனி மாவட்ட ஆட்சியர் மீது விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

farmers
farmers

தேனி மாவட்டம் தேவாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பதாகும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் தேவாரத்திலிருந்து கம்பம்மெட்டு சாலை வழியாக 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

அதே சமயம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்திலிருந்து சாக்கலூத்து மெட்டு வழியாக அமைத்தால் 25 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை சென்றுவிடலாம். ஏலத்தோட்டங்களுக்குச் சென்றுவரும் விவசாயிகளுக்கு இந்த வழித்தடம் பயன் தரும் வகையில் உள்ளதால், இவ்வழியில் சாலையமைத்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தேனி மாவட்ட விவசாயிகள் தீர்மானம்

இந்நிலையில், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு – வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால், மனு வாங்க இயலாது, திங்கள் கிழமையன்று தங்களது மனுவை அளிக்கலாம் எனக் கூறியதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜீவித் குமாரின் மேற்படிப்புக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம் - ஆட்சியர் பல்லவி பல்தேவ்

தேனி மாவட்டம் தேவாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பதாகும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் தேவாரத்திலிருந்து கம்பம்மெட்டு சாலை வழியாக 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

அதே சமயம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்திலிருந்து சாக்கலூத்து மெட்டு வழியாக அமைத்தால் 25 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுங்கண்டம், உடும்பஞ்சோலை சென்றுவிடலாம். ஏலத்தோட்டங்களுக்குச் சென்றுவரும் விவசாயிகளுக்கு இந்த வழித்தடம் பயன் தரும் வகையில் உள்ளதால், இவ்வழியில் சாலையமைத்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தேனி மாவட்ட விவசாயிகள் தீர்மானம்

இந்நிலையில், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு – வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் சாக்கலூத்து மெட்டு சாலை அமைப்பது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால், மனு வாங்க இயலாது, திங்கள் கிழமையன்று தங்களது மனுவை அளிக்கலாம் எனக் கூறியதாக ஐந்து மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜீவித் குமாரின் மேற்படிப்புக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம் - ஆட்சியர் பல்லவி பல்தேவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.