ETV Bharat / state

அக்கா கணவனை கொலை செய்த தம்பி, தம்பி மனைவி கைது -போலீசார் விசாரணை - அக்கா கணவனை கொலை செய்த தம்பி கைது

தேனி: கம்பம் அருகே முன் பகை காரணமாக அக்கா கணவனை கொலை செய்த தம்பி மற்றும் அவரது மனைவியை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

murder
murder
author img

By

Published : Dec 7, 2019, 11:09 PM IST

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகேயுள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவருக்கு ராஜேஸ்வரி (32) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது மணிகண்டன் அவரது மனைவி குழந்தைகளுடன் ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை அருகேயுள்ள ஆலமரம் பகுதியில் வசித்து வருகிறார்.

அக்கா கணவனை கொன்ற தம்பி

சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனும் ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரனும் ஒன்று சேர்ந்து ஆனைமலையன்பட்டி பகுதியில் டீக்கடை வைத்து நடத்தினர். அதில் இருவருக்கும் நஷ்டம் வரவே தனியாக பிரிந்து வாழை இலை அறுக்கும் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று காலை மணிகண்டன், அவரது மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில், வாழை இலை அறுக்கும் பணிக்காக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர். அப்போது பாண்டீஸ்வரன் (30), அவரது மனைவி நிரஞ்சனா (24) அங்கு எதிரே வந்தபோது இரு குடும்பத்தினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பாண்டீஸ்வரன், நிரஞ்சனா ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியைக் கொண்டு மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க வந்த மணிகண்டன் மனைவி ராஜேஸ்வரிக்கும் கையில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து பாண்டீஸ்வரன், அவரது மனைவி நிரஞ்சனா ஆகிய இருவரும் தப்பியோடினர்.

காயத்துடன் தப்பி வந்த ராஜேஸ்வரி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சென்று இச்சம்பவம் குறித்து புகாரளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்த ராஜேஸ்வரி தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் உடனடியாக கொலையாளிகள் பாண்டீஸ்வரன், நிரஞ்சனாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில் பாண்டீஸ்வரனின் மனைவியான நிரஞ்சனா நடத்தை மீது மணிகண்டன் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததாகவும், மணிகண்டனுக்கும் நிரஞ்சனாவிற்கும் தொடர்பு இருப்பது போன்று மணிகண்டன் பேசி வந்துள்ளதாகவும், அதனால் மணிகண்டனை இருவரும் கொலை செய்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாலையில் தறிகெட்டு ஓடியதால் நடைபாதையில் ஏறிய கார் - மூதாட்டி உயிரிழப்பு

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகேயுள்ள ஒத்தப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவருக்கு ராஜேஸ்வரி (32) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது மணிகண்டன் அவரது மனைவி குழந்தைகளுடன் ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை அருகேயுள்ள ஆலமரம் பகுதியில் வசித்து வருகிறார்.

அக்கா கணவனை கொன்ற தம்பி

சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனும் ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரனும் ஒன்று சேர்ந்து ஆனைமலையன்பட்டி பகுதியில் டீக்கடை வைத்து நடத்தினர். அதில் இருவருக்கும் நஷ்டம் வரவே தனியாக பிரிந்து வாழை இலை அறுக்கும் கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.

இந்நிலையில் இன்று காலை மணிகண்டன், அவரது மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில், வாழை இலை அறுக்கும் பணிக்காக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர். அப்போது பாண்டீஸ்வரன் (30), அவரது மனைவி நிரஞ்சனா (24) அங்கு எதிரே வந்தபோது இரு குடும்பத்தினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பாண்டீஸ்வரன், நிரஞ்சனா ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியைக் கொண்டு மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க வந்த மணிகண்டன் மனைவி ராஜேஸ்வரிக்கும் கையில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து பாண்டீஸ்வரன், அவரது மனைவி நிரஞ்சனா ஆகிய இருவரும் தப்பியோடினர்.

காயத்துடன் தப்பி வந்த ராஜேஸ்வரி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சென்று இச்சம்பவம் குறித்து புகாரளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்த ராஜேஸ்வரி தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் உடனடியாக கொலையாளிகள் பாண்டீஸ்வரன், நிரஞ்சனாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில் பாண்டீஸ்வரனின் மனைவியான நிரஞ்சனா நடத்தை மீது மணிகண்டன் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததாகவும், மணிகண்டனுக்கும் நிரஞ்சனாவிற்கும் தொடர்பு இருப்பது போன்று மணிகண்டன் பேசி வந்துள்ளதாகவும், அதனால் மணிகண்டனை இருவரும் கொலை செய்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாலையில் தறிகெட்டு ஓடியதால் நடைபாதையில் ஏறிய கார் - மூதாட்டி உயிரிழப்பு

Intro: கம்பம் அருகே முன்பகை காரணமாக அக்கா கணவனை கொலை செய்த தம்பி மற்றும் அவரது மனைவி கைது. காவல்துறையினர் விசாரணை.
Body:          தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள ஒத்தப்பட்டி சார்ந்தவர் மணிகண்டன் (36) இவருக்கும் சின்னமனூர் அருகே உள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும் (32) திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது மணிகண்டன் அவரது மனைவி குழந்தைகளுடன் ராயப்பன்பட்டி சண்முகாநதி அணை செல்லும் வழியில் ஆலமரம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இதனிடையே மணிகண்டனும் ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து ஆனைமலையன்பட்டி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு டீக்கடை ஒன்று வைத்து நடத்தியுள்ளனர். அதில் இருவருக்கும் நஷ்டம் வரவே தனியாக பிரிந்து வாழை இலை அறுக்கும் கூலி வேலைக்குச் செல்லத் துவங்கினர்.
         இந்நிலையில் இன்று காலை மணிகண்டன் மற்றும் அவரது மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில்; வாழை இலை அறுக்கும் பணிக்காக வீட்டிலிருந்து கிளம்பி வந்துள்ளனர். அப்போது பாண்டீஸ்வரன் (30) மற்றும் அவரது மனைவி நிரஞ்சனா (24) அங்கு வந்துள்ளனர். அப்போது இரு குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியைக் கொண்டு மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
         மேலும் இதை தடுக்க வந்த மணிகண்டன் மனைவி ராஜேஸ்வரிக்கும் கையில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. சரமாரியாக காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து பாண்டீஸ்வரன் மற்றும் அவரது மனைவி நிரஞ்சனா தப்பி ஓடி உள்ளனர். காயத்துடன் தப்பி வந்த ராஜேஸ்வரி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
         மேலும் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உடனடியாக கொலையாளிகள் பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
         முதல்கட்ட விசாரணையில் பாண்டீஸ்வரனின் மனைவியான நிரஞ்சனா நடத்தை மீது மணிகண்டன் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததாகவும், மணிகண்டனுக்கும் நிரஞ்சனாவிற்கும் தொடர்பு இருப்பது போன்று மணிகண்டன் பேசி வந்துள்ளதாகவும் அதனால் மணிகண்டனை இருவரும் கொலை செய்ததாக கூறி உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion: இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இராயப்பன்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.