ETV Bharat / state

பாஜக தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள்.. தேனியில் நடந்தது என்ன?

Theni BJP: தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக, அக்கட்சியின் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 9:49 AM IST

bjp-people-resigned-posting-against-theni-bjp-leader
பாஜக தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள்

தேனி: தேனி மாவட்ட பாஜக தலைவராக பி.சி.பாண்டியன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பி.சி.பாண்டியனை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் தொகுதி வாரியாக நாடாளுமன்ற பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு பொறுப்பாளராக ராஜபாண்டியன் என்பவரையும் மற்றும் இணை பொறுப்பாளராக ராமநாதன் என்பவரையும் நியமித்துள்ளனர். இதில் ராமநாதன் என்பவர், திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த ராமநாதனை இணை பொறுப்பாளராக அறிவித்தது, தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது. மேலும், மாவட்டத் தலைவர் பி.சி.பாண்டியன், ராமநாதனிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவரை பொறுப்பாளராக பரிந்துரை செய்ததாக பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த அமுதா திருச்செல்வன் ஆகிய இருவரையும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.

இதேபோல், ஆண்டிபட்டி தெற்கு ஒன்றியத் தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் திருமால்ராஜ் ஆகியோரையும் தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் நீக்கியுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஆண்டிபட்டி தெற்கு மண்டல பொதுச் செயலாளர்களான பேராசிரியர் செல்வமுத்து, மற்றும் நந்தகோபால் உள்பட சிலர், தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் பி.சி. பாண்டியன் மற்றும் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவமூர்த்தி ஆகியோரின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகக் கூறி, நேற்று (டிச.09) கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: 3 மாநிலங்களின் முதல்வர்கள் இன்று தேர்வு செய்யப்பட வாய்ப்பு.. ராஜஸ்தானில் முக்கிய கூட்டம்!

தேனி: தேனி மாவட்ட பாஜக தலைவராக பி.சி.பாண்டியன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பி.சி.பாண்டியனை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன் தொகுதி வாரியாக நாடாளுமன்ற பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு பொறுப்பாளராக ராஜபாண்டியன் என்பவரையும் மற்றும் இணை பொறுப்பாளராக ராமநாதன் என்பவரையும் நியமித்துள்ளனர். இதில் ராமநாதன் என்பவர், திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்த ராமநாதனை இணை பொறுப்பாளராக அறிவித்தது, தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது. மேலும், மாவட்டத் தலைவர் பி.சி.பாண்டியன், ராமநாதனிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவரை பொறுப்பாளராக பரிந்துரை செய்ததாக பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த அமுதா திருச்செல்வன் ஆகிய இருவரையும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.

இதேபோல், ஆண்டிபட்டி தெற்கு ஒன்றியத் தலைவர் ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் திருமால்ராஜ் ஆகியோரையும் தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியன் நீக்கியுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த ஆண்டிபட்டி தெற்கு மண்டல பொதுச் செயலாளர்களான பேராசிரியர் செல்வமுத்து, மற்றும் நந்தகோபால் உள்பட சிலர், தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் பி.சி. பாண்டியன் மற்றும் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவமூர்த்தி ஆகியோரின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகக் கூறி, நேற்று (டிச.09) கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: 3 மாநிலங்களின் முதல்வர்கள் இன்று தேர்வு செய்யப்பட வாய்ப்பு.. ராஜஸ்தானில் முக்கிய கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.