ETV Bharat / state

போடி நகராட்சியை கண்டித்து மக்களிடம் யாசகம் பெற்ற பாஜகவினர்

author img

By

Published : Nov 29, 2022, 1:51 PM IST

தேனி மாவட்டம் போடி நகராட்சியை கண்டித்து மக்களிடம் யாசகம் பெற்று பாஜகவினர் நூதன போராட்டம் நடத்தினர்.

மக்களிடம் யாசகம் பெற்ற பாஜகவினர்
மக்களிடம் யாசகம் பெற்ற பாஜகவினர்

தேனி: போடி நகராட்சியில் 33 வார்டுகளும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரினால் நகராட்சியில் ​நிதி இல்லை என ​அதிகாரிகள் ​தரப்பில் ​தெரிவி​க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் போடி நகர பாஜக சார்பில் கையில் ஓடு ஏந்தி பொதுமக்கள், வணிகர்களிடம் யாசகம் பெற்று நகராட்சியில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

நேற்று (நவ. 28) நடந்த இந்த​ போராட்டத்தில் பா​ஜ​க மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் தண்டபாணி, போடி 9​ ஆவது வார்டு பா​ஜக கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட 100​ பேர் கலந்துகொண்டனர். இவர்கள் போடி பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை கையில் ஓடு ஏந்தி சென்றனர். அதோடு கழுத்தில் நகராட்சியை கண்டித்து பதாகை​கள்​, மாலை போட்டுக்கொண்டும் யாசகம் பெற்றனர்.​

மக்களிடம் யாசகம் பெற்ற பாஜகவினர்

யாசகம் பெற்று முடித்த ​பின்பு, போடி நகராட்சி அலுவலகத்துக்குள்​ நுழைய முயன்ற பா​ஜ​க​வினரை ​போலீசார் தடுத்து நிறுத்தினர்.​ ​இ​தனால் போலீசாருக்கும், பா​ஜ​கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை​ நடத்தி, ​இருவரை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். அதன்படி போடி நகராட்சி 9​ ஆவது வார்டு பா​ஜ​க கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் தண்டபாணி ஆகியோர் நகராட்சி அலுவலகத்துக்குள் சென்று மக்களிடம் யாசகம் பெற்ற பணத்தை நகராட்சி அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றனர்.​

இதையும் படிங்க: 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன உத்தரப்பிரதேச பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

தேனி: போடி நகராட்சியில் 33 வார்டுகளும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரினால் நகராட்சியில் ​நிதி இல்லை என ​அதிகாரிகள் ​தரப்பில் ​தெரிவி​க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் போடி நகர பாஜக சார்பில் கையில் ஓடு ஏந்தி பொதுமக்கள், வணிகர்களிடம் யாசகம் பெற்று நகராட்சியில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

நேற்று (நவ. 28) நடந்த இந்த​ போராட்டத்தில் பா​ஜ​க மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் தண்டபாணி, போடி 9​ ஆவது வார்டு பா​ஜக கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட 100​ பேர் கலந்துகொண்டனர். இவர்கள் போடி பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி அலுவலகம் வரை கையில் ஓடு ஏந்தி சென்றனர். அதோடு கழுத்தில் நகராட்சியை கண்டித்து பதாகை​கள்​, மாலை போட்டுக்கொண்டும் யாசகம் பெற்றனர்.​

மக்களிடம் யாசகம் பெற்ற பாஜகவினர்

யாசகம் பெற்று முடித்த ​பின்பு, போடி நகராட்சி அலுவலகத்துக்குள்​ நுழைய முயன்ற பா​ஜ​க​வினரை ​போலீசார் தடுத்து நிறுத்தினர்.​ ​இ​தனால் போலீசாருக்கும், பா​ஜ​கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை​ நடத்தி, ​இருவரை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். அதன்படி போடி நகராட்சி 9​ ஆவது வார்டு பா​ஜ​க கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் தண்டபாணி ஆகியோர் நகராட்சி அலுவலகத்துக்குள் சென்று மக்களிடம் யாசகம் பெற்ற பணத்தை நகராட்சி அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றனர்.​

இதையும் படிங்க: 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன உத்தரப்பிரதேச பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.