ETV Bharat / state

கூடலூர் அருகே 27 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட இளைஞர் உடல்!

author img

By

Published : Oct 6, 2019, 6:18 PM IST

நீலகிரி: 27 நாட்களுக்கு முன்பு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடலை தீயணைப்புத் துறையினர் இன்று (அக்டோபர்-06) மீட்டுள்ளனர்.

nilgiri

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த புன்னம்புழா ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி புளியவயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அடித்துச் செல்லப்பட்டார்.

கூடலூர் அருகே 27 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட இளைஞர் உடல்

இதையடுத்து, தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கடந்த 26 நாட்களாக அவரது உடலைத் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று புளியவயல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு, ராஜேஷின் உடல் புன்னம்புழா ஆற்றின் சேற்றில் சிக்கியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு!

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த புன்னம்புழா ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி புளியவயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அடித்துச் செல்லப்பட்டார்.

கூடலூர் அருகே 27 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட இளைஞர் உடல்

இதையடுத்து, தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கடந்த 26 நாட்களாக அவரது உடலைத் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று புளியவயல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு, ராஜேஷின் உடல் புன்னம்புழா ஆற்றின் சேற்றில் சிக்கியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

தென்பெண்ணையாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு!

Intro:OotyBody:

கூடலூரை அடுத்த இரும்புபாலம் பகுதியில் கடந்த 27 நாட்களுக்கு பிறகு ஆற்றில் அடித்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ராஜேஷ் என்பவர் உடல் மீட்பு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த இரும்புபாலம் பகுதியில் பாண்டியாறு புன்னம்புழா ஆற்றை ஒட்டிய புளியவயல் பகுதிக்கு வீட்டுக்கு பொருட்களை வாங்கி சென்ற ராஜேஷ் என்ற வாலிபர் ஆற்றில் சுவர் இடிந்து அடித்து செல்லப்பட்டார். இவரை தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கடந்த 27 நாட்களாக தேடி வந்த நிலையில் இன்று இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றுகூடி மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்ட பொழுது ஒரு சேற்றில் சிக்கி அவருடன் உடல் இருப்பதாக காவல்துறை தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்த பின்னர் அவரது உடலை மீட்கப்பட்டு தற்சமயம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது 27 நாட்களுக்கு பின்பு அவரது உடல் கிடைத்ததால் இப்பகுதி மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர் இவர்கள் கூறும் பொழுது அவரது உடல் கிடைத்துவிட்டது இனியாவது இவர் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்Conclusion:Ooty

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.