நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கக்குச்சி பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி பள்ளியில் இ பாக்ஸ் கல்விமுறை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக படுகர் இன மக்களின் பாரம்பரிய கலாசார நடனம், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் வெற்றிவேல், நஞ்சன், முக்கிய ஊர் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மாநிலம் முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்