ETV Bharat / state

கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

author img

By

Published : Jun 17, 2019, 12:27 PM IST

நீலகிரி: கோத்தகிரி பெத்தளா ஹெத்தையம்மன் கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில் பூசாரிகளை மாற்றக்கோரி கிராம மக்கள் போரட்டாம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கிராமத்தில், மிகவும் பிரசித்திபெற்ற ஹெத்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூன்று பூசாரிகளை மாற்ற வேண்டும் என 19 கிராமங்களைச் சேர்ந்த ஒரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பூசாரி குடும்பத்தினர், அவரது ஆதரவாளர்களாக உள்ள மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், சுமுக தீர்வு ஏற்படாததால் 19 ஊர் தலைவர் ரங்கா கவுடர் தலைமையில் பூசாரிகளை மாற்ற வேண்டும் எனக்கூறி சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தீடீரென கோத்தகிரி-குன்னூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது உதவி ஆட்சியர் வந்து பூசாரிகளை மாற்றுவதாக உறுதியளித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சித் கைக்கார் சீமையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தினால், குன்னுார் கோத்தகிரி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கிராமத்தில், மிகவும் பிரசித்திபெற்ற ஹெத்தையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூன்று பூசாரிகளை மாற்ற வேண்டும் என 19 கிராமங்களைச் சேர்ந்த ஒரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், பூசாரி குடும்பத்தினர், அவரது ஆதரவாளர்களாக உள்ள மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், சுமுக தீர்வு ஏற்படாததால் 19 ஊர் தலைவர் ரங்கா கவுடர் தலைமையில் பூசாரிகளை மாற்ற வேண்டும் எனக்கூறி சுமார் 300 க்கும் மேற்பட்டோர் தீடீரென கோத்தகிரி-குன்னூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது உதவி ஆட்சியர் வந்து பூசாரிகளை மாற்றுவதாக உறுதியளித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

கோயில் பூசாரிகளை மாற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சித் கைக்கார் சீமையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தினால், குன்னுார் கோத்தகிரி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா ஹெத்தையம்மன் கோவில் பூசாரிகளை மாற்றக்கோரி  300 க்கும் மேற்பட்டோர்  கோத்தகிரி -குன்னூர் சாலையில்  மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு  

கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கிராமத்தில் படுகர் சமுதாய மக்களின்  மிகவும் பிரசித்தி பெற்ற ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கைக்கார் சீமைக்குட்பட்ட  19 கிராமங்களை சேர்ந்த படுகர் சமுதாய மக்களுக்கு சொந்தமான  பொதுவான கோவிலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.     பெத்தளா ஹெத்தையம்மன் கோவிலில் பணியாற்றி வரும் மூன்று  பூசாரிகளை மாற்ற வேண்டும் என 19 கிராமங்களை சேர்ந்த கைக்கார் சீமையை சேர்ந்த ஒரு  தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அந்த பூசாரி குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள மற்றொரு தரப்பினர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து , இன்று தாசில்தார் தலைமையில்  நடந்த  அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாததால் கைக்கார் சீமையை சேர்ந்தவர்கள் வரும் 24 -ம் தேதி தெவ்வ ஹப்பா பண்டிகை துவங்க உள்ளதால் அதற்கு முன்னதாக பூசாரிகளை மாற்றி உடனடியாக இந்த பிரச்சனைக்கு தேர்வு காண வேண்டும் எனக்கூறி சுமார் 300 க்கும் மேற்பட்டோர் 19 ஊர் தலைவர் ரங்கா கவுடர் தலைமையில்  பெட்டட்டியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் குன்னுார் மற்றும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அல்லது உதவி கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பூசாரிகளை மாற்றுவதாக உறுதி அளித்த்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். கிராம மக்களுக்கு குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு தாசில்தாரிடம் உரிய தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தினார்.  இதையடுத்து குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு வந்து கைக்கார் சீமையின் முக்கிய நிர்வாகிகள் , ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வரும் 20 -ம் தேதிக்குள்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர் ,  இதனால் குன்னுார் கோத்தகிரி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 





Body:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா ஹெத்தையம்மன் கோவில் பூசாரிகளை மாற்றக்கோரி  300 க்கும் மேற்பட்டோர்  கோத்தகிரி -குன்னூர் சாலையில்  மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு  

கோத்தகிரி அருகே உள்ள பெத்தளா கிராமத்தில் படுகர் சமுதாய மக்களின்  மிகவும் பிரசித்தி பெற்ற ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கைக்கார் சீமைக்குட்பட்ட  19 கிராமங்களை சேர்ந்த படுகர் சமுதாய மக்களுக்கு சொந்தமான  பொதுவான கோவிலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.     பெத்தளா ஹெத்தையம்மன் கோவிலில் பணியாற்றி வரும் மூன்று  பூசாரிகளை மாற்ற வேண்டும் என 19 கிராமங்களை சேர்ந்த கைக்கார் சீமையை சேர்ந்த ஒரு  தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அந்த பூசாரி குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள மற்றொரு தரப்பினர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து , இன்று தாசில்தார் தலைமையில்  நடந்த  அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாததால் கைக்கார் சீமையை சேர்ந்தவர்கள் வரும் 24 -ம் தேதி தெவ்வ ஹப்பா பண்டிகை துவங்க உள்ளதால் அதற்கு முன்னதாக பூசாரிகளை மாற்றி உடனடியாக இந்த பிரச்சனைக்கு தேர்வு காண வேண்டும் எனக்கூறி சுமார் 300 க்கும் மேற்பட்டோர் 19 ஊர் தலைவர் ரங்கா கவுடர் தலைமையில்  பெட்டட்டியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் குன்னுார் மற்றும் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் அல்லது உதவி கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பூசாரிகளை மாற்றுவதாக உறுதி அளித்த்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவதாக கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். கிராம மக்களுக்கு குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு தாசில்தாரிடம் உரிய தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தினார்.  இதையடுத்து குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு வந்து கைக்கார் சீமையின் முக்கிய நிர்வாகிகள் , ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வரும் 20 -ம் தேதிக்குள்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர் ,  இதனால் குன்னுார் கோத்தகிரி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.