ETV Bharat / state

தேயிலை குறித்து தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்

author img

By

Published : Jan 13, 2020, 8:34 AM IST

நீலகிரி: தேயிலை குறித்து அனைத்து தகவல்களையும் பெறும் வகையில் தேயிலை விவசாயிகள் 'சாய் சஹ்யோக்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

south-india-tea-board-of-india-launched-new-app-for-tea-farmers
சாய் சஹ்யோக் செயலியை பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. இந்திய தேயிலை வாரியம் சிறு தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக சிறு தேயிலை விவசாயிகளுக்கு விரைவுத் தகவல் குறியீடு உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள வசதியாக 'சாய் சஹ்யோக்' என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தேயிலை குறித்து அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலமாக எளிதில் பெற்று பயனடைய சிறு தேயிலை விவசாயிகள் மொபைலில், சாய் சஹ்யோக் செயலியை பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி குன்னூரில் தொடங்கியது.

'சாய் சஹ்யோக்' செயலி அறிமுகம்

இதற்கான சிறப்பு பயிற்சியைத் தொடங்கி வைத்த தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி, வரும் 31ஆம் தேதிக்குள் சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை உற்பத்தியாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி க்யூஆர் கோடு எனும் விரைவு தகவல் குறியீடு பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை உற்பத்தியாளர்கள், தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க: அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவின் டீ ஏற்றுமதிக்கு அடி!

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. இந்திய தேயிலை வாரியம் சிறு தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக சிறு தேயிலை விவசாயிகளுக்கு விரைவுத் தகவல் குறியீடு உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள வசதியாக 'சாய் சஹ்யோக்' என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தேயிலை குறித்து அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலமாக எளிதில் பெற்று பயனடைய சிறு தேயிலை விவசாயிகள் மொபைலில், சாய் சஹ்யோக் செயலியை பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி குன்னூரில் தொடங்கியது.

'சாய் சஹ்யோக்' செயலி அறிமுகம்

இதற்கான சிறப்பு பயிற்சியைத் தொடங்கி வைத்த தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி, வரும் 31ஆம் தேதிக்குள் சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை உற்பத்தியாளர்கள் இந்த செயலியை பயன்படுத்தி க்யூஆர் கோடு எனும் விரைவு தகவல் குறியீடு பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை உற்பத்தியாளர்கள், தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்க: அமெரிக்கா - ஈரான் மோதலால் இந்தியாவின் டீ ஏற்றுமதிக்கு அடி!

Intro:தேயிலை விவசாயிகளுக்கு விரைவுத் தகவல் குறியீடு மற்றும்   ‘சாய் சஹ்யோக்” என்ற செயலியை (மொபைல் ஆப்) பதிவிறக்கம் செய்து கொள்ள தென்னிந்திய தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில்  தேயிலை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. 
இந்திய தேயிலை வாரியம் சிறு தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு 
திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக  சிறு 
தேயிலை விவசாயிகளுக்கு விரைவுத் தகவல் குறியீடு மற்றும்   ‘சாய் சஹ்யோக்” என்ற செயலியை (மொபைல் ஆப்) பதிவிறக்கம் செய்து கொள்ள வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தேயிலை குறித்து அனைத்து தகவல்களையும், இந்த செயலி மூலமாக எளிதில் பெற்று பயனடைய சிறு தேயிலை விவசாயிகள் மொபைலில், பதிவு செய்யும் நிகழ்ச்சி குன்னூரில் துவங்கியது. 
இதற்கான சிறப்பு பயிற்சியை துவக்கி வைத்த, தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி பேசினார்.
வரும் 31ம் தேதிக்குள் சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை உற்பத்தியாளர்கள் இந்த செயலியை பதிவு செய்து க்யூஆர் கோடு எனும் விரைவு தகவல் குறியீடு பெற வேண்டும்.
இதில், சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை உற்பத்தியாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.





Body:தேயிலை விவசாயிகளுக்கு விரைவுத் தகவல் குறியீடு மற்றும்   ‘சாய் சஹ்யோக்” என்ற செயலியை (மொபைல் ஆப்) பதிவிறக்கம் செய்து கொள்ள தென்னிந்திய தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தில்  தேயிலை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. 
இந்திய தேயிலை வாரியம் சிறு தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு 
திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக  சிறு 
தேயிலை விவசாயிகளுக்கு விரைவுத் தகவல் குறியீடு மற்றும்   ‘சாய் சஹ்யோக்” என்ற செயலியை (மொபைல் ஆப்) பதிவிறக்கம் செய்து கொள்ள வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தேயிலை குறித்து அனைத்து தகவல்களையும், இந்த செயலி மூலமாக எளிதில் பெற்று பயனடைய சிறு தேயிலை விவசாயிகள் மொபைலில், பதிவு செய்யும் நிகழ்ச்சி குன்னூரில் துவங்கியது. 
இதற்கான சிறப்பு பயிற்சியை துவக்கி வைத்த, தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி பேசினார்.
வரும் 31ம் தேதிக்குள் சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை உற்பத்தியாளர்கள் இந்த செயலியை பதிவு செய்து க்யூஆர் கோடு எனும் விரைவு தகவல் குறியீடு பெற வேண்டும்.
இதில், சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை உற்பத்தியாளர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.