ETV Bharat / state

நீலகிரி மலை ரயிலுக்கு புதிய என்ஜின் - பொன்மலை ரயில் பணிமனை சாதனை

author img

By

Published : Oct 13, 2022, 4:19 PM IST

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பர்னஸ் ஆயிலில் இருந்து டீசலை எரிபொருளாக பயன் படுத்தி நீராவி மூலம் இயங்கும் மலை ரயில் என்ஜின், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு குன்னூர் ரயில்வே பணி மனைக்கு இன்று கொண்டு வரப்பட்டது.

ஊட்டி மலை ரயிலுக்கு புதிய என்ஜின்
ஊட்டி மலை ரயிலுக்கு புதிய என்ஜின்

நீலகிரி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகள் நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நிலக்கரியை எரிபாெருளாக கொண்டு இயங்கி வந்த மலை ரயிலால் நீலகிரியின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக கருத்து இருந்து வந்த நிலையில் நிலக்கரிக்கு மாற்றாக பர்னஸ் ஆயிலை எரி பொருளாக கொண்டு நீராவி மூலம் மலை ரயில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக இயக்கப்பட்டது.

ஆனாலும் இதிலும் நாளடைவில் புகை அதிக அளவு வந்தால் சுற்றுச்சூழல் தாெடர்ந்து பாதிக்கப்பட்டது, இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கு எரிபொருளாக டீசலைப் பயன்படுத்தி நீராவி மூலம் இயங்கும் மலை ரயில் என்ஜின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.

9 கோடியே 30 லட்சம் மதிப்பில் 7 மாதத்தில் புதிய மலை ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி நிறைவடைந்து, கடந்த 5 ஆம் தேதி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ட்ரெய்லர் லாரி மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் முதல் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது.

இந்த புதிதாக வடிவமைக்கப்பட்ட என்ஜின் மூலம் அதிக புகை வெளியேறாமலும், அதிக சப்தம் எழும்பாமல் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்க முடியும். நீராவி என்ஜினின் எரிபொருளாக அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளவுள்ள டீசல் டேங்க், தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஊட்டி மலை ரயிலுக்கு புதிய என்ஜின்

மலை ரயிலுக்கு ஏற்கனவே 1,400 லிட்டர் டீசல் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய என்ஜின் மூலம் 20 முதல் 25 சதவீதம் வரை எரி பொருள் மிச்சமாகும் என்றும், வேகத்தை பொருத்த வரை மலைப்பாதைக்கென நிர்ணயிக்கப்பட்ட 15 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே இயக்கப்படும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலை ரயிலுக்கு மகுடம் சூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த சிறப்பு என்ஜின், ரயில் என்ஜின் தயாரிப்பில் கிடைத்த மைல் கல் என்று கூறலாம்.

இதையும் படிங்க: சென்னையில் அதிகளவில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

நீலகிரி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகள் நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நிலக்கரியை எரிபாெருளாக கொண்டு இயங்கி வந்த மலை ரயிலால் நீலகிரியின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக கருத்து இருந்து வந்த நிலையில் நிலக்கரிக்கு மாற்றாக பர்னஸ் ஆயிலை எரி பொருளாக கொண்டு நீராவி மூலம் மலை ரயில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக இயக்கப்பட்டது.

ஆனாலும் இதிலும் நாளடைவில் புகை அதிக அளவு வந்தால் சுற்றுச்சூழல் தாெடர்ந்து பாதிக்கப்பட்டது, இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கு எரிபொருளாக டீசலைப் பயன்படுத்தி நீராவி மூலம் இயங்கும் மலை ரயில் என்ஜின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.

9 கோடியே 30 லட்சம் மதிப்பில் 7 மாதத்தில் புதிய மலை ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி நிறைவடைந்து, கடந்த 5 ஆம் தேதி திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ட்ரெய்லர் லாரி மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் முதல் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது.

இந்த புதிதாக வடிவமைக்கப்பட்ட என்ஜின் மூலம் அதிக புகை வெளியேறாமலும், அதிக சப்தம் எழும்பாமல் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்க முடியும். நீராவி என்ஜினின் எரிபொருளாக அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளவுள்ள டீசல் டேங்க், தண்ணீர் நிரப்பி வைக்க 4,500 லிட்டர் கொள்ளவுள்ள 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஊட்டி மலை ரயிலுக்கு புதிய என்ஜின்

மலை ரயிலுக்கு ஏற்கனவே 1,400 லிட்டர் டீசல் செலவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய என்ஜின் மூலம் 20 முதல் 25 சதவீதம் வரை எரி பொருள் மிச்சமாகும் என்றும், வேகத்தை பொருத்த வரை மலைப்பாதைக்கென நிர்ணயிக்கப்பட்ட 15 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே இயக்கப்படும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலை ரயிலுக்கு மகுடம் சூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த சிறப்பு என்ஜின், ரயில் என்ஜின் தயாரிப்பில் கிடைத்த மைல் கல் என்று கூறலாம்.

இதையும் படிங்க: சென்னையில் அதிகளவில் வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.