ETV Bharat / state

நீலகிரி எல்லையோர வனப்பகுதியில் காவல் கண்காணிப்பு தீவிரம்!

author img

By

Published : Nov 3, 2019, 5:06 PM IST

நீலகிரி : கேரளாவில் மாவோயிஸ்ட் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நீலகிரி எல்லையோர வனப்பகுதியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

நீலகிரி மாவட்ட எல்லையோர வனப்பகுதிகளில் அதிரடி காவல் துறையினரும் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு - கர்நாடக எல்லையான கக்கனல்லா, கேரள மாநிலம் நிலம்பூர் வனத்தை ஒட்டிய, தமிழ்நாடு எல்லையிலுள்ள நாடுகாணி, பாட்டவயல் உள்ளிட்ட முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அருகே கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கூடலூர், நாடுகாணி, கக்கனல்லா, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மன்னார்காடு, மஞ்சக்கண்டி வனப்பகுதியில் கேரளா 'தண்டர்போல்ட்' அதிரடிப்படையினர், நான்கு நாட்களுக்கு முன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த கார்த்திக், சுரேஷ், ஸ்ரீமதி ஆகியோர் உயிரிழந்தனர்.

கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

இதனைத் தொடர்ந்து, அதே வனப்பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணிக்க வாசகம் என்பவர் உயிரிழந்தார். இவர் கபினி தளம் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதின் எதிரொலி சோதனைச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு!

நீலகிரி மாவட்ட எல்லையோர வனப்பகுதிகளில் அதிரடி காவல் துறையினரும் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு - கர்நாடக எல்லையான கக்கனல்லா, கேரள மாநிலம் நிலம்பூர் வனத்தை ஒட்டிய, தமிழ்நாடு எல்லையிலுள்ள நாடுகாணி, பாட்டவயல் உள்ளிட்ட முக்கிய சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் அருகே கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கூடலூர், நாடுகாணி, கக்கனல்லா, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மன்னார்காடு, மஞ்சக்கண்டி வனப்பகுதியில் கேரளா 'தண்டர்போல்ட்' அதிரடிப்படையினர், நான்கு நாட்களுக்கு முன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த கார்த்திக், சுரேஷ், ஸ்ரீமதி ஆகியோர் உயிரிழந்தனர்.

கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர்

இதனைத் தொடர்ந்து, அதே வனப்பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணிக்க வாசகம் என்பவர் உயிரிழந்தார். இவர் கபினி தளம் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டதின் எதிரொலி சோதனைச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு!

Intro:OotyBody:
உதகை 03-11-19

கேரளாவில் மாவோயிஸ்ட் மீது நடத்தப்பட்ட எண்கவுண்டரை தொடர்ந்து தமிழக
மாநில எல்லைகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணி...

கோவை அருகே, கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, கூடலூர், நாடுகாணி, கக்கனல்லா மற்றும் பாட்டவயல் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மன்னார்காடு, மஞ்சக்கண்டி வனப்பகுதியில் கேரளா 'தண்டர்போல்ட்' அதிரடிப்படையினர், நான்கு நாட்களுக்கு முன் நடத்தியதுப்பாக்கி சூட்டில், மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த கார்த்திக், சுரேஷ், ஸ்ரீமதி ஆகியோர்உயிரிழந்தனர். தொடர்ந்து, அதே வனப்பகுதியில் நேற்றுமுன்தினம், நடந்த துப்பாக்கி சூட்டில் மாணிக்கவாசகம் என்பவர் உயிரிழந்தார். இவர் கபினி தளம் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர் எனகூறப்படுகிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எல்லையோர வனபகுதிகளில் அதிரடி காவல் துறையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லா, கேரளாநிலம்பூர் வனத்தை ஒட்டிய, தமிழக - எல்லையிலுள்ள நாடுகாணி மற்றும் பாட்டவயல் உள்ளிட்ட முக்கிய சோதனை சாவடிகளில், காவல் துறையினர் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் உயர் காவல் துறை அதிகாரிகளிடம் இருந்து, அடுத்த உத்தரவு வரும்வரை இப்பணி தொடரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
Conclusion:Ooty

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.