ETV Bharat / state

' பெரிய மருத்துவமனை அமைக்கத் தேவைப்படும் பட்ஜெட்டில் 60% வெளிநாட்டுப் பொருட்கள்! ' - பெரிய மருத்துவமனை அமைக்க தேவைப்படும் பட்ஜெட்டில் 60% வெளிநாட்டு பொருட்கள்

நீலகிரி: இந்தியாவில் ஒரு பெரிய மருத்துவமனை அமைக்கத் தேவைப்படும் மொத்த பட்ஜெட்டில் சுமார் 60 விழுக்காடு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கே செலவிடப்படுகிறது என்று உதகையில் நடைபெற்ற 58ஆவது மருந்தியல் வார விழாவில் கே. மாதேஸ்வரன் என்பவர் தெரிவித்தார்.

k.madeshvaran
k.madeshvaran
author img

By

Published : Dec 19, 2019, 11:57 AM IST

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் மருந்தியல் வார நிறைவு விழா நடைபெற்றது. கோவையில் உள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் கே. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பேராசிரியர். கே. சின்னசாமி, மருத்துவர் எம். ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையின் தலைவர் கே. மாதேஸ்வரன் பேசியதாவது, 'இந்தியாவில் ஒரு பெரிய மருத்துவமனை அமைக்க தேவைப்படும், மொத்த பட்ஜெட்டில் சுமார் 60 விழுக்காடு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கே செலவிடப்படுகிறது.

பெரும்பாலும் மருந்து மூலப்பொருட்கள் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அவை மாத்திரைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலை மாறவேண்டும். அதற்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் சார்ந்த தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே வளர வேண்டும்' என்றார்.

இதன் பின்னர் பேராசிரியர் கே. சின்னசாமி பேசுகையில், ' இந்தியாவில் சுமார் 2 ஆயிரத்து 500 கல்லூரிகள் பார்மசி துறையில் நான்கு வருட இளநிலை பட்டப் படிப்பையும், சுமார் 400 கல்லூரிகள் பார்ம் - டி எனப்படும் ஆறு வருட முதுநிலை பட்டப்படிப்பையும் வழங்குகிறது.

பல தனியார் மருத்துவமனைகள் பார்ம் - டி பட்டதாரிகளை பணியமர்த்தி அவர்களின் சிறப்பு சேவைகளை நோயாளிகளின் சேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இதுபோன்று வருங்காலங்களில் அரசு மருத்துவமனைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிளாட்பாரத்தில் தங்கி வீடு, கடைகளை நோட்டமிட்டு திருட்டு: சிசிடிவியால் போலீசில் சிக்கிய கும்பல்!

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் மருந்தியல் வார நிறைவு விழா நடைபெற்றது. கோவையில் உள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் கே. மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பேராசிரியர். கே. சின்னசாமி, மருத்துவர் எம். ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையின் தலைவர் கே. மாதேஸ்வரன் பேசியதாவது, 'இந்தியாவில் ஒரு பெரிய மருத்துவமனை அமைக்க தேவைப்படும், மொத்த பட்ஜெட்டில் சுமார் 60 விழுக்காடு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கே செலவிடப்படுகிறது.

பெரும்பாலும் மருந்து மூலப்பொருட்கள் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அவை மாத்திரைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலை மாறவேண்டும். அதற்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் சார்ந்த தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே வளர வேண்டும்' என்றார்.

இதன் பின்னர் பேராசிரியர் கே. சின்னசாமி பேசுகையில், ' இந்தியாவில் சுமார் 2 ஆயிரத்து 500 கல்லூரிகள் பார்மசி துறையில் நான்கு வருட இளநிலை பட்டப் படிப்பையும், சுமார் 400 கல்லூரிகள் பார்ம் - டி எனப்படும் ஆறு வருட முதுநிலை பட்டப்படிப்பையும் வழங்குகிறது.

பல தனியார் மருத்துவமனைகள் பார்ம் - டி பட்டதாரிகளை பணியமர்த்தி அவர்களின் சிறப்பு சேவைகளை நோயாளிகளின் சேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இதுபோன்று வருங்காலங்களில் அரசு மருத்துவமனைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிளாட்பாரத்தில் தங்கி வீடு, கடைகளை நோட்டமிட்டு திருட்டு: சிசிடிவியால் போலீசில் சிக்கிய கும்பல்!

Intro:OotyBody:உதகை 19-12-19


இந்தியாவில் ஒரு பெரிய மருத்துவமனை அமைக்க தேவைப்படும் மொத்த பட்ஜெட்டில் சுமார் 60 சதவிகிதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்தவ உபகரணங்களுக்கே செலவிடப்படுகிறது இந்த நிலை மாறவேண்டும் உதகையில் நடைபெற்ற 58 வது மருந்தியல் வார விழாவில் கருத்து.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் மருந்தியல் வார நிறைவு விழா நடைபெற்று.
கோவை ராயல் கேர் பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் மருத்துவர். கே. மாதேஸ்வரன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் இந்தியாவில் ஒரு பெரிய மருத்துவமனை அமைக்க தேவைப்படும் மொத்த பட்ஜெட்டில் சுமார் 60 சதவிகிதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்தவ உபகரணங்களுக்கே செலவிடப்படுகிறது
என்றும், அதேபோல், பெரும்பாலும் மருந்து மூலப்பொருட்கள் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அவை மாத்திரைகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார். இந்த நிலை மாறவேண்டும் என்றும் அதற்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் சார்ந்த தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே வளர வேண்டும் என்று கூறியதுடன், இன்றைய மாணவர்கள் இதனை கருத்தில்கொண்டு தங்களின் திறன்களை வளர்த்து கொள்ளவேண்டயதின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
விழாவில் தலைமையுரையாற்றிய பேராசிரியர். கே. சின்னசாமி அவர்கள் இந்தியாவில் சுமார் 2500 கல்லூரிகள் பார்மசி துறையில் நான்கு வருட இளநிலை பட்ட படிப்பைம், சுமார் 400 கல்லூரிகள் பார்ம்.டி எனப்படும் ஆறு வருட முதுநிலை பட்டபடிப்பையும் வழங்குவதாகவும், மருந்தாளுனர்களின் சேவை இந்தியாவில் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும், பல தனியார் மருத்துவமனைகள் பார்ம்.டி. பட்டதாரிகளை பணியமர்த்தி அவர்களின் சிறப்பு சேவைகளை நோயாளிகளின் சேவைக்காக பயன்படுத்தி கொள்வதாகவும், அதுபோல் வருங்காலங்களில் அரசு மருத்துவமனைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவித்தார்.
உதகையில் புதியதாக அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் மற்றும் சிறப்பு அதிகாரி மருத்துவர். எம். ரவீந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்டு பேசும்போது மாணவர்கள் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர். ஏ பி ஜே அப்துல் கலாம் கூறியபடி கனவு காண வேண்டும் என்று கூறினார்.
ஜெ கே கே முனிராஜா பார்மசி கல்லூரி, குமாரபாளையம், ஜெ கே கே நடராஜா பார்மசி கல்லூரி, குமாரபாளையம், மற்றும் ஜெ கே கே முனிராஜா பார்மசி கல்லூரி, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களான முனைவர். செந்தில்குமார், முனைவர். சம்பத்குமார் மற்றும் முனைவர். பெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மருந்தாளுனர்களின் சேவைகள் மென்மேலும் விரிவடைய வேண்டியதின் அவசியம் குறித்து பேசினர். உதகையில் உள்ள ஜெ எஸ் எஸ் பார்மசிக் கல்லூரி இந்தியாவில் உள்ள பார்மசிக் கல்லூரிகளுக்கு முன்னோடியாகவும் உதாரணமாகவும் உள்ளதாக அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.


Conclusion:Ooty

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.