ETV Bharat / state

கனமழை காரணமாக சுமார் 50 வீடுகள் சேதம்!

author img

By

Published : Oct 22, 2019, 2:56 PM IST

நீலகிரி: கொலம்பை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மண் சரிந்து விழுந்துள்ள வீடு

நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

பல ஆண்டுளாக குடியிருந்து வந்த வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கபட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் வீடுகளை இழந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். கனமழை தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:கனமழை எதிரொலி - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

பல ஆண்டுளாக குடியிருந்து வந்த வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கபட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் வீடுகளை இழந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். கனமழை தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:கனமழை எதிரொலி - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு

Intro:OotyBody:
உதகை 22-10-19
நீலகிரியில் பெய்த கனமழையால் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.

நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையினால் நீலகிரி மாவட்டம் முழுவதும் 100ற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளது. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழையினால் 50ற்கும் மேற்பட்;ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மண்சரிந்து பல வீடுகள் மூடிகாணப்படுகின்றன. பல ஆண்டுளாக குடியிருந்த வந்த வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கபட்ட மக்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் மழை நீடிக்கும் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அப்பர்பவானி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் இன்று மதியம் 250கன அடி தண்ணீர் திறக்கபடவுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேட்டுகொண்டுள்ளார்.

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.