ETV Bharat / state

உதகையில் சாலை வசதி வேண்டி பொதுமக்கள் மறியல்!

author img

By

Published : Oct 17, 2019, 4:36 PM IST

உதகை: மஞ்சனக்கொரையில் சாலை வசதி செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால், உதகை – அவலாஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ooty road damage

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்கொரையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே இப்பகுதிகளுக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சிறிய நடைபாதை போல மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உதகை – அவலாஞ்சி சாலை மறியல் போராட்டம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மஞ்சனக்கொரை பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், உதகை – அவலாஞ்சி சாலையில் போராட்டம் நடத்தினர்.

இதனால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகராட்சி அலுவலர்கள், சாலை வசதி செய்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையும் படிக்க: குழந்தைகள், முதியவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சனக்கொரையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே இப்பகுதிகளுக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சிறிய நடைபாதை போல மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உதகை – அவலாஞ்சி சாலை மறியல் போராட்டம்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த மஞ்சனக்கொரை பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், உதகை – அவலாஞ்சி சாலையில் போராட்டம் நடத்தினர்.

இதனால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகராட்சி அலுவலர்கள், சாலை வசதி செய்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையும் படிக்க: குழந்தைகள், முதியவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்!

Intro:OotyBody:
உதகை 17-10-19
சாலை வசதி வேண்டி சாலை மறியில் ஈடுபட்ட பொதுமக்கள். உதகை – அவலாஞ்சி சாலையில் போக்குவரத்து 2மணி நேரம் பாதிப்பு.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ளது மஞ்சனக்கொரை. இப்பகுதியில் 500ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இப்பகுதிகளுக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சாலையானது சிறிய நடைப்பாதை போல மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுக்குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மஞ்சனக்கொரை மக்கள் உதகையிலிருந்து அவலாஞ்சி-க்கு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உடனடியாக சாலை சீரமைத்து தரவேண்டும் என தெரிவித்து சுமார் 200ற்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. பின்னர் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் சாலை வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.