ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் 'ஜெகரண்டா' மலர்கள்

author img

By

Published : Mar 5, 2020, 11:24 PM IST

நீலகிரி: சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Jacaranda
Ooty Jacaranda flower

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் 'ஜெகரண்டா' மலர்கள் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயர்கள் வெளிநாட்டு மரங்களான, 'ஜெகரண்டா, பிளேம் ஆப் பாரஸ்ட், யூகலிப்டஸ்' உள்ளிட்ட ஏராளமான வகை மரங்களை இங்கு நடவு செய்தனர்.

இந்த வரிசையில் வளர்க்கப்பட்ட 'ஜெகரண்டா' மரங்களில், நீல நிற மலர்கள் கோடையில் மலர்வது வழக்கம். தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரும் சாலைகளின் இருபுறங்களிலும் நீல நிறங்களில் ஜெகரண்டா மலர்கள் பூத்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது.

இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து அருகே சென்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். தேயிலைத் தோட்டங்கள் நடுவே நீல நிறக் கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க: பவானிசாகர் அணையில் யானைகள் முகாம் - பொதுப்பணித் துறை எச்சரிக்கை..!

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் 'ஜெகரண்டா' மலர்கள் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயர்கள் வெளிநாட்டு மரங்களான, 'ஜெகரண்டா, பிளேம் ஆப் பாரஸ்ட், யூகலிப்டஸ்' உள்ளிட்ட ஏராளமான வகை மரங்களை இங்கு நடவு செய்தனர்.

இந்த வரிசையில் வளர்க்கப்பட்ட 'ஜெகரண்டா' மரங்களில், நீல நிற மலர்கள் கோடையில் மலர்வது வழக்கம். தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரும் சாலைகளின் இருபுறங்களிலும் நீல நிறங்களில் ஜெகரண்டா மலர்கள் பூத்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது.

இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து அருகே சென்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். தேயிலைத் தோட்டங்கள் நடுவே நீல நிறக் கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க: பவானிசாகர் அணையில் யானைகள் முகாம் - பொதுப்பணித் துறை எச்சரிக்கை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.