ETV Bharat / state

தேயிலை விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Feb 3, 2020, 2:56 PM IST

நீலகிரி: தேயிலை விவசாயம் பாதிப்படைந்ததால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரமணன் தலைமையில் தேயிலை விவசாயம் பாதிப்படைந்ததையொட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே, பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறுவதும் மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவதும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் வழங்காமலும் உள்ளது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேலும், கோத்தகிரி, குன்னூர்,உதகை, கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை கலப்படத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கேரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைத்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் இதற்கும் மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லையெனில் மாவட்ட மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் சங்கத்தலைவர் ரமணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காய்கறிகளை சாலையில் கொட்டி உழவர் சந்தை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரமணன் தலைமையில் தேயிலை விவசாயம் பாதிப்படைந்ததையொட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே, பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேறுவதும் மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவதும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் வழங்காமலும் உள்ளது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேலும், கோத்தகிரி, குன்னூர்,உதகை, கூடலூர், மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை கலப்படத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கேரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைத்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் இதற்கும் மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லையெனில் மாவட்ட மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் சங்கத்தலைவர் ரமணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காய்கறிகளை சாலையில் கொட்டி உழவர் சந்தை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Intro: 30 ஆண்டுகாலமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அகதிகளாக பிற மாவட்டங்களில் தஞ்சம் புக காரணமாக உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். ஊர் தலைவர பெள்ளிகவுடர்,  லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேடறுவதும் மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவதும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் ஏழை விவசாயிகளுக்கு சென்று சேராததனை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூபாய் 100 கோடிக்கு மேல் இன்னும் வழங்க நடவடிக்கை எடுக்காத தேயிலை வாரியத்தை கண்டித்தும், கோத்தகிரி குன்னூர் உதகை கூடலூர் மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை கலப்படத்தின் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், பண்டைய பழங்குடி  படுகர் சமுதாயத்தை ஆதிவாசி பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்பதுபோல பல்வேறு கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டது.  இனிவரும் காலங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம்  நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும்  தொடர்ந்து நடத்தப்படும் எனவும் இதற்கும் மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லையெனில் மாவட்ட மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் மேலும் சட்டமன்ற -நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் சங்கத்தலைவர் ரமணன் தெரிவித்தார். சங்கத்தின் நிர்வாகிகள், பல்வேறு சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

Body:கடந்த 30 ஆண்டுகாலமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அகதிகளாக பிற மாவட்டங்களில் தஞ்சம் புக காரணமாக உள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாக்குபெட்டா விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரமணன் தலைமை தாங்கினார். ஊர் தலைவர பெள்ளிகவுடர்,  லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பசுந்தேயிலைக்கு போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு அகதிகளாக வெளியேடறுவதும் மீதமுள்ள விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்து வட்டிக்காரர்கள் கொடுமைப்படுத்துவதும், வங்கிகளின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எந்தவிதமான கடன் உதவிகளும் ஏழை விவசாயிகளுக்கு சென்று சேராததனை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூபாய் 100 கோடிக்கு மேல் இன்னும் வழங்க நடவடிக்கை எடுக்காத தேயிலை வாரியத்தை கண்டித்தும், கோத்தகிரி குன்னூர் உதகை கூடலூர் மஞ்சூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலை வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேயிலை கலப்படத்தின் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், பண்டைய பழங்குடி  படுகர் சமுதாயத்தை ஆதிவாசி பட்டியலில் சேர்த்திட வேண்டும் என்பதுபோல பல்வேறு கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டது.  இனிவரும் காலங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம்  நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும்  தொடர்ந்து நடத்தப்படும் எனவும் இதற்கும் மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லையெனில் மாவட்ட மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் மேலும் சட்டமன்ற -நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் சங்கத்தலைவர் ரமணன் தெரிவித்தார். சங்கத்தின் நிர்வாகிகள், பல்வேறு சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  இறுதியில் சங்க நிர்வாகி சந்திரன் நன்றி கூறினார்

பேட்டி - ரமணன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.