ETV Bharat / state

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தாய்! - குடும்ப தகராறில் தாய் தற்கொலை

நீலகிரி: கூடலூரில் மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனை
author img

By

Published : Sep 7, 2019, 3:40 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் முருகன். இவர் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது மனைவி வனிதா (34). இந்த சூழலில் குடும்ப தகராறு காரணமாக, வனிதா கடந்த 4ஆம் தேதியன்று இரவு தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்த தகவலறிந்து, அருகில் உள்ளவர்கள் இவர்களை கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக நால்வரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வனிதா உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தொடர்பாக கூடலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே வனிதாவின் கணவர் முருகன் கைது செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் முருகன். இவர் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது மனைவி வனிதா (34). இந்த சூழலில் குடும்ப தகராறு காரணமாக, வனிதா கடந்த 4ஆம் தேதியன்று இரவு தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்த தகவலறிந்து, அருகில் உள்ளவர்கள் இவர்களை கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக நால்வரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வனிதா உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தொடர்பாக கூடலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே வனிதாவின் கணவர் முருகன் கைது செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:OotyBody:
உதகை 07-09-19
கூடலூரில் 3குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் குடித்த சம்பவம். தாய் உயிரிழப்பு. மூன்று குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை. கணவர் கைது.

கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் முருகன். இவர் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டுனர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வனிதா(34). குடும்பத்தில் தகராறு காரணமாக வனிதா கடந்த 4ஆம் தேதி இரவு தனது மூன்று குழந்தைகளான அபித்ஷா 13, அனுஸ்ரீ 10, அக்;ஷதா 8, ஆகிய 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்து தகவலறிந்த அருகில் உள்ளவர்கள் இவர்களை கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேல்சிகிச்சைக்காக நால்வரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி வனிதா உயிரிழந்துள்ளார். குழந்தைகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் வனிதாவின் கணவர் முருகன் கைது செய்யபட்டுள்ளார். உயிரிழந்த வனிதா விஷம் குடிப்பதற்கு முன் கடிதம் எழுதி வைத்திருப்பது குறிப்பிடதக்கது.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.