ETV Bharat / state

உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு-போக்குவரத்து பாதிப்பு

author img

By

Published : Aug 7, 2019, 8:22 PM IST

நீலகிரி: நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கபட்டது.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1374 மில்லி மீட்டர் மழை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகி உள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இன்றும் பைக்காரா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 அடி நீளத்திற்கு பெரிய அளவிலான விரிசல் உருவாகி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு காரணமாக சாலையின் ஒரு பகுதி முழுவதும் பள்ளத்தில் சரிந்துள்ளது. நிலச்சரிவின்போது அவ்வழியாக வாகனம் ஏதும் வராததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அச்சாலையில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரிசல் ஏற்பட்ட பகுதியில், திடமாக உள்ள வலதுபக்க சாலையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட சாலையை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1374 மில்லி மீட்டர் மழை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகி உள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இன்றும் பைக்காரா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 அடி நீளத்திற்கு பெரிய அளவிலான விரிசல் உருவாகி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு காரணமாக சாலையின் ஒரு பகுதி முழுவதும் பள்ளத்தில் சரிந்துள்ளது. நிலச்சரிவின்போது அவ்வழியாக வாகனம் ஏதும் வராததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அச்சாலையில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரிசல் ஏற்பட்ட பகுதியில், திடமாக உள்ள வலதுபக்க சாலையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட சாலையை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 07-08-19
தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கபட்டது…. சாலை துண்டிக்கபட்ட இடத்தை தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…
நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1374 மில்லி மீட்டர் மழை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் பைக்காரா பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50 அடி நீளத்திற்கு பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக சாலையில் ஒரு பகுதி முழுவதும் பள்ளத்தில் சரிந்தது.
நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனமும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கபட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தபட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் விரிசல் ஏற்பட்ட பகுதியின் அருகில் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தபட்டு வாகன போக்குவரத்தை அனுமதித்தனர். அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பேட்டி: கிருஸ்ணமூர்த்தி – பைக்காரா
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.