ETV Bharat / state

சயன், மனோஜ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் - உதகை நீதிமன்றம்

நீலகிரி: கொடநாடு கொலை வழக்கில் சயன், மனோஜ் உள்ளிட்ட பத்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Apr 10, 2019, 8:37 PM IST

கொடநாடு கொலை வழக்கு

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, பிஜின்குட்டி உட்பட பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொடநாடு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு சயான், மனோஜ் உள்பட 10 பேரும் நீதிபதி வடமலை முன்பு நேரில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதி வடமலை, பத்து பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்வதாக தெரிவித்தார். அப்போது சதீசன் உள்ளிட்ட எட்டு பேர் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை தங்களது ஒப்புதலின்றி வழக்கறிஞர் சிவக்குமார் திரும்ப பெற்றதாகவும், தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினமே பத்து பேர் மீதும் குற்றசாட்டு பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, பிஜின்குட்டி உட்பட பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொடநாடு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு சயான், மனோஜ் உள்பட 10 பேரும் நீதிபதி வடமலை முன்பு நேரில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதி வடமலை, பத்து பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்வதாக தெரிவித்தார். அப்போது சதீசன் உள்ளிட்ட எட்டு பேர் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை தங்களது ஒப்புதலின்றி வழக்கறிஞர் சிவக்குமார் திரும்ப பெற்றதாகவும், தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினமே பத்து பேர் மீதும் குற்றசாட்டு பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

உதகை
10-04-19
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை 12-ந்தேதிக்கு ஒத்தி வைப்பு.... குற்றம் சாட்டபட்டுள்ள சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் மீது 12 மீது அன்றைய தினம் குற்றசாட்டு பதிவு செய்யபடும் என நீதிபதி உத்தரவு..

   கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்  சயான், வாளையாறு  மனோஜ், தீபு, மனோஜ்சாமி, பிஜின்குட்டி, ஜம்சீர்அலி, உதயகுமார், சதீசன், மனோஜ்சாமி, ஜித்தின் ஜாய் ஆகிய 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளனர். இந்த நிலையில் கொடநாடு வழக்கு  விசாரணை இன்று நடைபெற்றது.விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரும் நேரில் ஆஜராகினர். அப்போது சதீசன், உதயக்குமார் உள்பட 8 பேர் சார்பாக கடந்த மாதம் 8-ந்தேத அந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தக்கல் செய்திருந்த மனுவை அவர்களது வழக்கறிஞர் சிவக்குமார் அவர்களின் ஒப்புதல் இன்றி திரும்ப பெற்ற கொண்டார்.மதியம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சயான் உள்ளிட்ட 10 பேரும் நீதிபதி வடமலை முன்பு ஆஜராகினர். அப்போது அவர்களிடம் நீதிபதி வடமலை தங்கள் 10 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்வதாக தெரிவித்தார். அப்போது சதீசன் உள்ளிட்ட 8 பேர் தங்களது ஒப்புதல் இன்றி தங்கள் தரப்பு வழக்கறிஞர் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றதாக கூறியதுடன் தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்றும் அடுத்த விசாரணையின் போது வேறு வழக்கறிஞரை வைத்து வழக்கு நடத்த உள்ளதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தனர். அதனை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்றை தினமே குற்றசாட்டு பதிவு செய்யபடும் என்றும் தெரிவித்து விசாரணையை 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.