ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 10ஆண்டு சிறை

நீலகிரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Oct 20, 2019, 4:58 AM IST

வழக்கறிஞர் பேட்டி

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியைச் சேர்ந்தவர் விஜயரத்தினம் என்ற சுரேஷ்(22). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாவட்ட நீதிபதி முரளிதரன் குற்றவாளியான சுரேஷூக்கு 10ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 4லட்சம் உதவி தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தவிட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியைச் சேர்ந்தவர் விஜயரத்தினம் என்ற சுரேஷ்(22). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாவட்ட நீதிபதி முரளிதரன் குற்றவாளியான சுரேஷூக்கு 10ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 4லட்சம் உதவி தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தவிட்டார்.

மாவட்ட மகளிர் நீதிமன்றம்

இதையும் படிங்க:13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Intro:OotyBody:உதகை 19.10.19

கடந்த 2017ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த விஜயரத்தினம் என்ற குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் நீதிபதி முரளீதரன் தீர்ப்பளித்தார்

கூடலூர் அருகே ஓவேலி முல்லை நகர் என்ற பகுதியில் விஜயரத்தினம் என்ற சுரேஷ் (22) அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் குற்றவாளியை கூடலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்பு இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த 16/10/19 அன்று ஆஜராக வேண்டிய குற்றவாளி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தப்பித்த நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளியை காவல் துறையினர் கோவையில் கைது செய்தனர்.
இதனிடையே, உதகை மகளிர் நீதிமன்றத்தில் குற்றவாளியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றவாளி தண்டனையை ஏக காலத்தில் முழுமையாக அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். மேலும்
நீதிபதி உத்தரவின்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 4 லட்ச ரூபாய் தொகையை உடனடியாக வங்கி கணக்கில் மாவட்ட நிர்வாகம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.