ETV Bharat / state

கனமழையால் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி - அமைச்சர் ராதாகிருஷ்ணன் - ooty

நீலகிரி: தொடர்ந்து பெய்து கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நிதி உதவி வழங்கினார்.

ooty
author img

By

Published : Aug 11, 2019, 4:58 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதில் சிக்கி உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், உதகை அருகே உள்ள நடுவட்டம் பகுதியில் மழையால் வீடு இடிந்து உயிரிழந்த அமுதா அவரது மகள் பாவனா ஆகியோரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. மழையில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் ஆறு பேர் உயிரிழந்தனர். இன்றைக்கு உயிரிழந்த குடும்பத்தில் ஐந்து பேருக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் 50 லட்சம் வழங்கப்படவுள்ளது. இம்மாவட்டத்தில் 49 முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. அதில், 5 ஆயிரத்து 350 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் முகாமில் தங்கியுள்ளவர்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க வேண்டும் எனக் கேட்டதற்கு, வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு குடிசை மாற்று மூலமாக வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு அதிகளவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார்.


கனமழையால் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதில் சிக்கி உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், உதகை அருகே உள்ள நடுவட்டம் பகுதியில் மழையால் வீடு இடிந்து உயிரிழந்த அமுதா அவரது மகள் பாவனா ஆகியோரின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. மழையில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் ஆறு பேர் உயிரிழந்தனர். இன்றைக்கு உயிரிழந்த குடும்பத்தில் ஐந்து பேருக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் 50 லட்சம் வழங்கப்படவுள்ளது. இம்மாவட்டத்தில் 49 முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. அதில், 5 ஆயிரத்து 350 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் முகாமில் தங்கியுள்ளவர்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க வேண்டும் எனக் கேட்டதற்கு, வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு குடிசை மாற்று மூலமாக வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு அதிகளவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார்.


கனமழையால் உயிரிழந்த குடும்பத்திற்கு நிதியுதவி
Intro:OotyBody: உதகை 11-08-19
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஸ்ணன் நிதி உதவி வழங்கினார்.
நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. கனமழையில் சிக்கி மாவட்டத்தில் 6பேர் உயிரிழ்ந்தனர். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10லட்சம் வழங்கபடும் என தமிழக முதல்வர் எடப்பாடு பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் கால்நடைதுறை அமைச்சர் ராதாகிருஸ்ணன் உதகை அருகே உள்ள நடுவட்டம் பகுதியில் மழையால் வீடு இடிந்து உயிரிழிந்த அமுதா மற்றும் மகள் பாவனா ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு ஒருவருக்கு 10லட்சம் வீதம் இரண்டு பேருக்கு 20லட்சத்திற்கான காசோலை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது – நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வீடுகளில், விவசாய நிலங்கள் தண்ணீர் புகுந்துள்ளது, பல வீடுகளிலும் மழைநீர் புகுந்தும் மக்கள் இடிபாடுபகளில் சிக்கியும் தவித்து வந்தனர். கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழையில் சிக்கியும் வீடுகள் இடிந்ததிலும் 6பேர் உயிரிழிந்துள்ளனர். இன்றைக்கு உயிரிழந்த குடும்பத்தில் 5பேருக்கு தலா 10லட்சம் வீதம் 50லட்சம் வழங்கபடவுள்ளது. எனவும், நாளைக்கு ஒருவருக்கு வழங்கபடும் எனவும் தெரிவித்தார். மேலும் இம்மாவட்டத்தில் 49முகாம்கள் அமைக்கபட்டுள்ளதாவும், அதில் 5350 பேர் தங்கவைக்கபட்டுள்ளதாவும் அவர்களுக்கு தேவையான உணவுகள் வசதிகள் செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் முகாமில் தங்கியுள்ளவர்கள் தங்களுக்கு நிரந்தர வீடுகள் வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை கட்ட இடம் தேர்வு செய்யபட்டு குடிசை மாற்று மூலமாக வீடுகள் கட்டி தர ஏற்பாடு செய்யபடும் என்றார். பாதிக்கபாட்ட விவசாய பயிர்களுக்கு அதிகளவில் இழப்பீட்டு தொகை வழங்கபடும் என்றார். மேலும் மழையில் சிக்கி உயிரிழந்த இத்தலார் பகுதியை சேர்ந்த சென்னன், குருத்துகுளி பகுதியை சேர்ந்த விமலா, சுசிலா ஆகியோரின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கடவுள்ளது.
பேட்டி : ராதாவிருஸ்னன் - கால்நடைதுறை அமைச்சர்
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.