நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சியிலுள்ள ஒடக்கொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(52).
இன்று (டிச.8) இவர் தனது காஃபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று மணியைத் தாக்கி, காலால் மிதித்தது. இதனால் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதிவாசிகள், காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற கூடலூர் காவலர்கள், மணியின் உடலைக் கைப்பற்றிய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் பூவை கொட்டி விவசாயிகள் போராட்டம்