நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டோி பகுதியில் சாலை விாிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதில் தபால் நிலையம், நியாயவிலைக் கடை உட்பட 15க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அங்குள்ள கடை வியாபாரிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினரும் நகராட்சித் துறையினரும் இணைந்து தனியாருக்கு தேநீர் கடை அமைக்க அனுமதியளித்தனர்.
இதையடுத்து கடை திறக்கப்பட்ட பின்னர், அதன் அருகிலிருந்த பயணிகளின் நிழற்குடை மாயமானது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே எட்டு கிராமங்களுக்கு செல்லக் கூடிய பிரதான பகுதியாக உள்ளதால் அந்தப் பகுதியில் மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதையும் படிங்க:
‘ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு’