நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகிறனர். இவர்களுக்காக பூங்காவில் குடியிருப்புகளும் உள்ளன. வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்தக் குடியிருப்புகளில் உள்ள ஊழியர்கள் வழக்கம் போல் பூங்கா பணிக்காக காலை 8:30 மணிக்குச் சென்றனர்.
அப்போது வனப் பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இச்சத்தம் கேட்டு ஊழியர்கள் அருகே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமேயான குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளார்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக ஊழியர்கள் 108 அவரச ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவக்குழுவும், காவல் துறையினரும் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிருடன் மீட்கப்பட்ட ஆண் குழந்தைக்கு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக உதகை நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிக்க: லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கு: மூன்றாவது நபர் கைது!