ETV Bharat / state

18ஆவது முறையாக பவானிசாகர் அணை நிரம்பியது - நீலகிரியில் கனமழை

ஈரோடு: பவானிசாகர் அணை 18ஆவது முறையாக நிரம்பியதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி சாகர் அணை நிரம்பியது
author img

By

Published : Oct 22, 2019, 3:38 AM IST

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக இருந்து வந்தது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி 96அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் 102 அடியை தற்போது எட்டியுள்ளது.

பொதுப்பணித்துறை விதிகளின்படி, அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும்போது நீரை தேக்கிவைக்க இயலாது, அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீரை, அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிட வேண்டும். அதன்படி, தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால், அணையின் 9 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பவானிசாகர் கரையோரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.0 டிஎம்சியாகவும், நீர்வரத்து 15011 கனஅடியாகவும் உள்ளது.

இதையும் படிங்க:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கக் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக இருந்து வந்தது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி 96அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் 102 அடியை தற்போது எட்டியுள்ளது.

பொதுப்பணித்துறை விதிகளின்படி, அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும்போது நீரை தேக்கிவைக்க இயலாது, அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீரை, அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிட வேண்டும். அதன்படி, தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால், அணையின் 9 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பவானிசாகர் கரையோரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.0 டிஎம்சியாகவும், நீர்வரத்து 15011 கனஅடியாகவும் உள்ளது.

இதையும் படிங்க:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கக் கோரிக்கை

Intro:Body:18ஆவது முறையாக நிரம்பியது பவானிசாகர் அணை

அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்


நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக  நீர்வரத்து வந்தது. கடந்த அக்.14ம் தேதி 96 அடியாக இருந்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் 105 அடி நீர்மட்டம் உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று  102 அடியை எட்டியது. பொதுப்பணித்துறை விதிகளிடம்படி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும் போது நீரை தேக்கவைக்க இயலாது என்றும் அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே பவானிஆற்றில் திறந்துவிடு வேண்டும். இதன்படி தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் அணையில் மேல்மதகில் உள்ள உபரிநீர் போக்கி 9 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வெண்நிர நுரையுடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் வெள்ள கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து உள்ளாட்சி மற்றும் வருவாய்துறை சார்பில் பவானிசாகர் கரையோரத்தில் தாழ்வான இடத்தில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆக்ஸட் 15ம் தேதி அணை முழுகொள்ளளவை எட்டியதால் பவானிஆற்றில் 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 30 நாள்கள் 26 டிஎம்சி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1948 ஆண்டு துவங்கிய அணை கட்டுமான பணி 1955 ம் நிறைவடைந்து  1960 ம் ஆணடு அணை 105 அடியான முழுகொள்ளளவை எட்டியது தற்போது அணை 18 வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

21ம் தேதி  நிலவரப்படி
அணையின் நீர்மட்டம் 102 அடி, நீர் இருப்பு 30.0 டிஎம்சி, நீர்வரத்து 15011 கனஅடி,  நீர்வெளியேற்றம் 00 கனஅடி யாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.