சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள கடைகளில் ஒரு முறை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது என நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
எனவே அந்தப் பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி மேற்படி பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.
மேலும், சுற்றுலாத்தலங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் 68 இடங்களில் வாட்டர் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு லிட்டர் தண்ணீர் 5 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், இதை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.