ETV Bharat / state

குன்னூரில் சுவரில் துளையிட்டு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!

author img

By

Published : Feb 3, 2021, 9:01 AM IST

நீலகிரி: குன்னூர் பகுதியிலுள்ள செல்போன் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்ற நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

2-dot-50-lakh-worth-of-cell-phones-looted-by-digging-into-a-wall
2-dot-50-lakh-worth-of-cell-phones-looted-by-digging-into-a-wall

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் கடைகள் இயங்கிவருகின்றன. நேற்று முன்தினம் (பிப். 1) இரவு கடை ஊழியர்கள் வழக்கம்போல கடையை அடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

நேற்று (பிப். 2) வழக்கம்போல் கடையைத் திறந்து பார்த்தபோது, கடையிலிருந்த செல்போன்கள் திருடுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் கடையின் பின்புறச் சுவரில் துளையிட்டு செல்போன்களைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த காவல் துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியைக் கொண்டு விசாரணை நடத்தினர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன்களைக் கொள்ளையடித்த காட்சி பதிவாகியுள்ளது.

மேலும் கைரேகை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு கடையில் சிதறிக்கிடந்த செல்போன் கவர்கள், பல இடங்களில் கைரேகைகள் ஆகியவற்றைச் சேகரித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான செல்போன்களை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போட்டோஷூட் எடுக்க வந்த இளைஞர்கள் கல்குட்டையில் மூழ்கி பலி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் கடைகள் இயங்கிவருகின்றன. நேற்று முன்தினம் (பிப். 1) இரவு கடை ஊழியர்கள் வழக்கம்போல கடையை அடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

நேற்று (பிப். 2) வழக்கம்போல் கடையைத் திறந்து பார்த்தபோது, கடையிலிருந்த செல்போன்கள் திருடுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் கடையின் பின்புறச் சுவரில் துளையிட்டு செல்போன்களைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த காவல் துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியைக் கொண்டு விசாரணை நடத்தினர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன்களைக் கொள்ளையடித்த காட்சி பதிவாகியுள்ளது.

மேலும் கைரேகை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு கடையில் சிதறிக்கிடந்த செல்போன் கவர்கள், பல இடங்களில் கைரேகைகள் ஆகியவற்றைச் சேகரித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளியைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான செல்போன்களை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போட்டோஷூட் எடுக்க வந்த இளைஞர்கள் கல்குட்டையில் மூழ்கி பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.