ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயிலில் புதிய கொடிமரம் நிலைநிறுத்தும் பணி - Pooja to the Tanjore Flag

தஞ்சை: பெரிய கோயிலில் புதிய கொடிமரம் நிலைநிறுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

புதிய கொடிமரம் நிலைநிறுத்தும் பணி
புதிய கொடிமரம் நிலைநிறுத்தும் பணி
author img

By

Published : Jan 27, 2020, 7:00 PM IST

நாடு முழுவதும் உள்ள சிவபக்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் திருக்குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 1997ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடமுழுக்கின்போது பயன்படுத்தப்பட்ட கொடிமரமானது அகற்றப்பட்டு, தற்போது புதிய கொடிமரம் நடப்படும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தப் புதிய கொடிமரமானது 50 ஆண்டுகள் பழமையவாய்ந்தது. மேலும், பர்மாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. இந்தக் கொடிமரத்தின் விலையானது ஒன்பது லட்ச ரூபாய் எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

புதிய கொடிமரம் நிலைநிறுத்தும் பணி

தற்போது கொடி மரத்தின் மீது செப்புத்தகடு பொருத்தப்பட்டு கோயிலில் நிலைநிறுத்தும் பணியில் கோயில் குடமுழுக்குப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

முன்னதாக கொடிமரத்திற்கு பிரகாரத்திற்கு வெளியே பாலாலயம் செய்யப்பட்டு, சிவலிங்கத்திற்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: கோயில் சிலை கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் ஆய்வாளர் ஆஜராக உத்தரவு

நாடு முழுவதும் உள்ள சிவபக்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் திருக்குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 1997ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடமுழுக்கின்போது பயன்படுத்தப்பட்ட கொடிமரமானது அகற்றப்பட்டு, தற்போது புதிய கொடிமரம் நடப்படும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தப் புதிய கொடிமரமானது 50 ஆண்டுகள் பழமையவாய்ந்தது. மேலும், பர்மாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது. இந்தக் கொடிமரத்தின் விலையானது ஒன்பது லட்ச ரூபாய் எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

புதிய கொடிமரம் நிலைநிறுத்தும் பணி

தற்போது கொடி மரத்தின் மீது செப்புத்தகடு பொருத்தப்பட்டு கோயிலில் நிலைநிறுத்தும் பணியில் கோயில் குடமுழுக்குப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

முன்னதாக கொடிமரத்திற்கு பிரகாரத்திற்கு வெளியே பாலாலயம் செய்யப்பட்டு, சிவலிங்கத்திற்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: கோயில் சிலை கடத்தல் வழக்கு: முன்னாள் காவல் ஆய்வாளர் ஆஜராக உத்தரவு

Intro:தஞ்சாவூர் ஜன 27

தஞ்சை பெரிய கோயிலில் புதிய கொடிமரம் நிலைநிறுத்தும் பணி நடைபெற்று வருகிறதுBody:


நாடுமூழுவதும் உள்ள சிவபக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகப் புகழ்பெற்ற
தஞ்சை பெரிய கோயிலில் திருக்குடமுழுக்கு விழா வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறள்ள நிலையில்
கடந்த 1997ஆம் ஆண்டு நடத்தபட்ட குடமுழுக்கின் போது பயன்படுத்தப்பட்ட கொடி மரமானது அகற்றப்பட்டு தற்போது புதிய கொடிமரம் நடப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிதாக நடபடும் கொடிமரம் ஆனது 50 ஆண்டுகள் பழமையவாய்ந்த பர்மாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு கொடி மரத்தின் மீது செப்புத்தகடு அளிக்கப்பட்டு தற்போது அதனை நிலைநிறுத்தும் பணி கோவில் கும்பாபிஷேக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்தக் கொடிமரத்தின் விலையானது சுமார் 9 லட்சம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். கொடிமரம் நிலைநிறுத்தப்படும் முன்பாக பாலாலயம் செய்யப்பட்டு பிறாகரத்திற்கு வெளியே வைக்கப்பட்ட சிவ லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடிமரம் நிலைநிறுத்தபட்ட பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விக்னேஸ்வர பூஜை நடைபெற உள்ளது.Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.