ETV Bharat / state

மின்கம்பியில் சிக்கிய பசுவை காப்பாற்ற முயன்ற பெண் உயிரிழப்பு!

author img

By

Published : May 13, 2020, 2:24 PM IST

தஞ்சாவூர்: மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய பசுவை காப்பாற்ற முயன்ற பெண்ணும், பசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு  மின்சாரம் தாக்கி பசு உயிரிழப்பு  தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி பெண்ணும் பசுவும் உயிரிழப்பு  மின்சாரம் தாக்கி உயிரிழப்பு  Electric Attack Death  Women Dead By Electric Attack  Cow Dead By Electric Attack  Women And Cow Dead By Electric Attack In Thanjavur
Electric Attack Death

தஞ்சாவூர் மாவட்டம், ஒக்கநாடு கீழையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் (எ) செல்லப்பன். இவரது மனைவி சரோஜா (53). இவர் நேற்று மாலை தான் வளர்த்து வரும் பசுவை மேய்ப்பதற்காக அவருக்கு சொந்தமான வயலுக்கு ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.

அப்போது, பசு எதிர்பாராதவிதமாக வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட சரோஜா மின்கம்பியில் மின்சாரம் பாய்வது அறியாமல் பசு மீது இருந்து மின்கம்பியை எடுக்க முயன்றபோது பசு மற்றும் சரோஜா மீது மின்சாரம் தாக்கியது.

அதில் பசுவும், சரோஜாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அறிந்த அந்தக் கிராம மக்கள் ஒரத்தநாடு மின்வாரிய துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரோஜாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இறந்து போன பசுவை உடற்கூறாய்வு செய்ய கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி இரு உயிர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், ஒக்கநாடு கீழையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் (எ) செல்லப்பன். இவரது மனைவி சரோஜா (53). இவர் நேற்று மாலை தான் வளர்த்து வரும் பசுவை மேய்ப்பதற்காக அவருக்கு சொந்தமான வயலுக்கு ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.

அப்போது, பசு எதிர்பாராதவிதமாக வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட சரோஜா மின்கம்பியில் மின்சாரம் பாய்வது அறியாமல் பசு மீது இருந்து மின்கம்பியை எடுக்க முயன்றபோது பசு மற்றும் சரோஜா மீது மின்சாரம் தாக்கியது.

அதில் பசுவும், சரோஜாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அறிந்த அந்தக் கிராம மக்கள் ஒரத்தநாடு மின்வாரிய துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரோஜாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இறந்து போன பசுவை உடற்கூறாய்வு செய்ய கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மின்சாரம் தாக்கி இரு உயிர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.