ETV Bharat / state

உயிர்பலி கேட்க காத்திருக்கும் அரசு கட்டடம்; இடிக்கக்கோரி மக்கள் கோரிக்கை!

author img

By

Published : May 18, 2019, 9:20 PM IST

தஞ்சை : உயிர்ப்பலி கேட்க காத்திருக்கும் அரசுக் கட்டடத்தை அப்புறப்படுத்தக்கோரி அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதிலமடைந்த கட்டடம்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் அரசு வேலைவாய்ப்பு அலுவலம் ஒன்று உள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம், இப்போது பயன்பாட்டில் இல்லை. அதனால், பல இடங்களில் சிதலமடைந்தும், பெயர்ந்தும் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டடத்தை இடித்து தள்ளி அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உயிர்பலி கேட்க காத்திருக்கும் அரசு கட்டடம்

இந்தக் கட்டடத்தை கடந்துச் செல்லவே அச்சமாக இருப்பதாகவும், குழந்தைகள் சிலர் பெற்றோரின் கண்டிப்பையும் மீறி அந்த பகுதியில் விளையாடி வருவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் உடனே இடித்து தள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் அரசு வேலைவாய்ப்பு அலுவலம் ஒன்று உள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம், இப்போது பயன்பாட்டில் இல்லை. அதனால், பல இடங்களில் சிதலமடைந்தும், பெயர்ந்தும் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டடத்தை இடித்து தள்ளி அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உயிர்பலி கேட்க காத்திருக்கும் அரசு கட்டடம்

இந்தக் கட்டடத்தை கடந்துச் செல்லவே அச்சமாக இருப்பதாகவும், குழந்தைகள் சிலர் பெற்றோரின் கண்டிப்பையும் மீறி அந்த பகுதியில் விளையாடி வருவதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் உடனே இடித்து தள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:உயிர்ப்பலி ஏற்படுத்த காத்திருக்கும் அரசுக் கட்டிடம் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியானது முத்தம்மாள் தெரு தெருவில் உள்ள மக்களின் நலனுக்காக வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தோடு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு மூலம் கிராம நூல் நூற்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளடைவில் இந்தத் தொழில் முடங்கிப் போகவே இந்த கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கட்டிடம் பத்து வருடங்களாக மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து வந்ததால் இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இருந்தும் இந்த கோரிக்கை இரண்டரை வருடங்களாக நீடித்து வரும் நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகள் சேதமடைந்து எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதனால் இந்தக் கட்டிடத்திற்கு செல்லவே அச்சப்படும் நிலையில் சிறு குழந்தைகள் பெற்றோர்களின் கண்டிப்பையும் மீறி கட்டிடத்திற்குள் சென்று விளையாடி வருகிறது. இதனால் பழுதடைந்த அந்த கட்டிடம் விழுந்து உயிர் சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் இப்பகுதி மக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே உயிர்பலி ஏற்படும் முன் இந்த கட்டிடத்தை இடித்து இப்பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பூங்கா அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.