ETV Bharat / state

இனி வரும் காலங்களில் அமமுக யானை பலம் பெறும்:டி.டி.வி.தினகரன் கருத்து!

author img

By

Published : Aug 18, 2019, 8:59 PM IST

தஞ்சாவூர்: இனிவரும் தேர்தல்களில் அமமுக யானை பலத்துடன் வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dinakaran


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அ.மு.மு.க.,பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ' இந்த எடப்பாடி ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்போது காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.ஆனால் இந்த தண்ணீர் கடைமடை விவசாயிகளுக்கு செல்லும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை அரசு மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டின் வளங்களை பாழாக்கும் திட்டங்களைதான் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.இனி வரும் காலங்களில் இந்த ஆட்சி நடத்தியவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும். விவசாயிகள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராடிவருகின்றனர்.எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டங்களை விளைநிலங்களில் செயல்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் பேட்டி

பின்னர் அமமுவில் இருந்த பலரும் வெளியேறி வேறு கட்சிகளில் இணைகிறார்களே ? என்ற பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , 'தொண்டர்கள் யாரும் அமமுக வைவிட்டுப்போகவில்லை சிலர் தங்களது சுயநலத்திற்காக சென்றுவிட்டனர். இனிவரும் தேர்தலில் யானை பலத்துடன் அமமுக வெற்றிபெரும்' என்று தெரிவித்தார்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அ.மு.மு.க.,பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ' இந்த எடப்பாடி ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்போது காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.ஆனால் இந்த தண்ணீர் கடைமடை விவசாயிகளுக்கு செல்லும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை அரசு மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டின் வளங்களை பாழாக்கும் திட்டங்களைதான் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.இனி வரும் காலங்களில் இந்த ஆட்சி நடத்தியவர்களின் பெயர்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும். விவசாயிகள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு எதிராக போராடிவருகின்றனர்.எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டங்களை விளைநிலங்களில் செயல்படுத்தக்கூடாது என்று தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் பேட்டி

பின்னர் அமமுவில் இருந்த பலரும் வெளியேறி வேறு கட்சிகளில் இணைகிறார்களே ? என்ற பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , 'தொண்டர்கள் யாரும் அமமுக வைவிட்டுப்போகவில்லை சிலர் தங்களது சுயநலத்திற்காக சென்றுவிட்டனர். இனிவரும் தேர்தலில் யானை பலத்துடன் அமமுக வெற்றிபெரும்' என்று தெரிவித்தார்.

Intro:தஞ்சாவூர்,ஆக.18–


அ.ம.மு.க.,அடுத்த தேர்தலில் யானை பலம் பெறும் என கும்பகோணதில் தினகரன் அதீத நம்பிக்கை தெரிவித்துள்ளார்Body:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அ.ம.மு.க.,துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது; ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் முன்பு முறைகேடுகளையும் அனாவசியமாக செய்யப்படும் செலவுகளையும் கட்டுப்படுத்தினாலே விலை குறைவாக வழங்க முடியும் என்ற அவர் விலை உயர்வு உடனே திரும்பப் பெற வேண்டும்.
காவிரியில் வரும் தண்ணீரை கடைமடை வரை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை வேண்டும். ஆனால் தற்போது உள்ள ஆட்சியாளர்கள், தாங்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவே முனைப்பாக செயல்படுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை கிடையாது. குறிப்பாக விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது. அடுத்த தேர்தலில் இந்த ஆட்சியாளர்களின் பெயர்கள் கறுப்பு பட்டியிலில் இடம் பெற போகிறது. டெல்டாவில் ஹை ட்ரோகார்பன்,மீத்தேன் திட்டத்திற்கு எதிராக அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் துாண்டி விட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. விளைநிலங்கள் பாதிக்கும் என்பதால் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே அவர்களுடைய உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனுக்கு எதிராக ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தி. விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் கடலில் எடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்.
அமைச்சர் மணிகண்டன் விகாரம் தொடர்பாக முதல்வரிடம் கேளுங்கள். பதவியில் இருப்பது மட்டுமே அரசியல் என்று நினைப்பது தவறு. மக்கள் நலனுக்கு பேராடுவது தான் அரசியலில் முதல் கொள்கையாக இருக்க வேண்டும். இந்த தேர்தல் தோல்வி அ.ம.மு.கவை பாதிக்கவில்லை. ஒரு சில சுயநலத்திற்காக கட்சியை விட்டு சென்றுள்ளனர். தொண்டர்கள் யானை பலத்துடன் இருக்கிறார்கள். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் பலத்தை காட்டுவோம் என்றார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.