ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jul 13, 2020, 9:45 PM IST

தஞ்சாவூர்: பூதலூர் அருகே நேருக்கு நேர் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில், அதில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு
வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே புதுப்பட்டி என்னுமிடத்தில் சானூரப்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர், மீனாட்சி சுந்தரம் மகன் தனசேகரன் (39). இவர் புதுப்பட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது தனசேகரனும் செங்கிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த செபஸ்டின் ராஜ் மகன் இன்பர்ட்ஜெலஸ்டினும் (27) நேருக்கு நேராக மோதினர்.

இந்த விபத்தில் இருவருமே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் காவல் துறையினர் இரண்டு உடல்களையும் கைப்பற்றி, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து பூதலூர் காவல் ஆய்வாளர் முருகேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கியவர்களை மீட்காமல் மதுபானங்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே புதுப்பட்டி என்னுமிடத்தில் சானூரப்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர், மீனாட்சி சுந்தரம் மகன் தனசேகரன் (39). இவர் புதுப்பட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது தனசேகரனும் செங்கிப்பட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த செபஸ்டின் ராஜ் மகன் இன்பர்ட்ஜெலஸ்டினும் (27) நேருக்கு நேராக மோதினர்.

இந்த விபத்தில் இருவருமே சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் காவல் துறையினர் இரண்டு உடல்களையும் கைப்பற்றி, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து பூதலூர் காவல் ஆய்வாளர் முருகேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கியவர்களை மீட்காமல் மதுபானங்களை அள்ளிச் சென்ற மக்கள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.