தஞ்சாவூரில் தென்னங்குடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த காலபைரவர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் தஞ்சாவூர் மட்டுமின்றி புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசித்துப் பெற்று விளங்கிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் உலக நன்மையும், அமைதியும் வேண்டி மஹாருத்ரயாகம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, காலபைரவர் கோயிலில் நேற்று (பிப். 16) காலை 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மஹாருத்ரயாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: பதஞ்சலி யோகா மையத்தினை தொடங்கி வைத்த பாபா ராம்தேவ்!