ETV Bharat / state

“பவன் கல்யாண் திடீர் பிள்ளையார்... விஜய்.. எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது”- திருநாவுக்கரசர் பளீச் பேட்டி! - Thirunavukkarasar on pawan kalyan

பவன் கல்யாண் திடீர் பிள்ளையார் போல் கட்சி தொடங்கி அதிர்ஷ்டவசமாக அரசியல் கலத்தில் வெற்றி பெற்றவர் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

காங்கிரஸ் திருநாவுக்கரசர், பவன் கல்யாண்
காங்கிரஸ் திருநாவுக்கரசர், பவன் கல்யாண் (Credits- ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நேற்று (அக்.5) மாலை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையானது உறையூர் குறத்தெரு அருகே தொடங்கிய அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பாதயாத்திரையின் நிறைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் கூறுகையில், “இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு அதிகமாகி கொண்டு வருகிறது.

பாஜக திசை திருப்புகிறது: ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்தால், அவர் இந்தியாவை விமர்சனம் செய்வதாக பாஜகவினர் திசை திருப்புகின்றனர். இந்தியாவை பற்றி விமர்சனம் செய்வது வேறு, அரசை விமர்சனம் செய்வது வேறு, இரண்டும் ஒன்றல்ல.

காங்கிரஸ் திருநாவுக்கரசர் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

பவன் கல்யாண் திடீர் பிள்ளையார்: குறிப்பிட்ட மதம் மொழிக்கான அரசாங்கம் போல பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பவன் கல்யாண் திடீர் பிள்ளையார் போல் கட்சி தொடங்கினார். அதிர்ஷ்டவசமாக அவர் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் தற்போது சந்திரபாபு நாயுடுவின் பெருந்தன்மையால் அவர் துணை முதலமைச்சராக பதவியில் உள்ளார். தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு பவன் கல்யாண் தேசிய அளவில் பெரிய தலைவர் ஒன்றும் அல்ல. அதனால்தான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவரின் கருத்தை புறந்தள்ளிவிட்டு போய்விட்டார்.

இதையும் படிங்க: லட்டு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு... பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி!

ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்புகள் அனுமதியோடு நடக்கிறதா சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறதா என கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. சில இடங்களில் அனுமதி மறுத்தாலும் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்து விடுகிறார்கள். அதனால் அரசுக்கு அவர்களுக்கு அனுமதி தர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

விஜய் மாநாடு: நடிகர் விஜய் நடத்தும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் கையில்தான் உள்ளது. கட்சி தொடங்கும் எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது.

கட்சி தொடங்கும் எல்லோரும் தோல்வி அடைவார்கள் என்றும் கூற முடியாது. அவருக்கு தற்பொழுது வாழ்த்துக்கள் தான் கூற வேண்டும். புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர். அவர் அவரின் கட்சியினர் எல்லோரையும் மாநாட்டிற்கு வாருங்கள் என்று தான் அழைப்பார் வீட்டில் தூங்குங்கள் என கூற மாட்டார்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நேற்று (அக்.5) மாலை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையானது உறையூர் குறத்தெரு அருகே தொடங்கிய அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பாதயாத்திரையின் நிறைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் கூறுகையில், “இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு அதிகமாகி கொண்டு வருகிறது.

பாஜக திசை திருப்புகிறது: ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்தால், அவர் இந்தியாவை விமர்சனம் செய்வதாக பாஜகவினர் திசை திருப்புகின்றனர். இந்தியாவை பற்றி விமர்சனம் செய்வது வேறு, அரசை விமர்சனம் செய்வது வேறு, இரண்டும் ஒன்றல்ல.

காங்கிரஸ் திருநாவுக்கரசர் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

பவன் கல்யாண் திடீர் பிள்ளையார்: குறிப்பிட்ட மதம் மொழிக்கான அரசாங்கம் போல பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பவன் கல்யாண் திடீர் பிள்ளையார் போல் கட்சி தொடங்கினார். அதிர்ஷ்டவசமாக அவர் வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் தற்போது சந்திரபாபு நாயுடுவின் பெருந்தன்மையால் அவர் துணை முதலமைச்சராக பதவியில் உள்ளார். தமிழ்நாட்டு தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு பவன் கல்யாண் தேசிய அளவில் பெரிய தலைவர் ஒன்றும் அல்ல. அதனால்தான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவரின் கருத்தை புறந்தள்ளிவிட்டு போய்விட்டார்.

இதையும் படிங்க: லட்டு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு... பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி!

ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்புகள் அனுமதியோடு நடக்கிறதா சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறதா என கண்காணிக்க வேண்டியது அரசின் கடமை. சில இடங்களில் அனுமதி மறுத்தாலும் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்று வந்து விடுகிறார்கள். அதனால் அரசுக்கு அவர்களுக்கு அனுமதி தர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

விஜய் மாநாடு: நடிகர் விஜய் நடத்தும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் கையில்தான் உள்ளது. கட்சி தொடங்கும் எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது.

கட்சி தொடங்கும் எல்லோரும் தோல்வி அடைவார்கள் என்றும் கூற முடியாது. அவருக்கு தற்பொழுது வாழ்த்துக்கள் தான் கூற வேண்டும். புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர். அவர் அவரின் கட்சியினர் எல்லோரையும் மாநாட்டிற்கு வாருங்கள் என்று தான் அழைப்பார் வீட்டில் தூங்குங்கள் என கூற மாட்டார்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.