ETV Bharat / state

படகு கவிழ்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் மாயம்! - படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் மாயம்

தஞ்சாவூர்: படகு கவிழ்ந்து மாயமான எட்டு மீனவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

rameswaram-8-fisherman-missing-when-the-boat-sinks
author img

By

Published : Sep 4, 2019, 8:39 PM IST

ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியிலுள்ள முனியசாமி (47), ரஞ்சித் குமார் (23), மதன் (26), இலங்கேஸ்வரன் (20), தரக்குடியன் (25), நந்தகுமார் (23), செந்தில் (31), முனீஸ்வரன் (24), உமாகாந்த்(19), காளிதாஸ் (19) என பத்து மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி படகு வாங்குவதற்காக கடலூருக்குச் சென்றனர்.

பின்னர் படகு வாங்கிவிட்டு கடல்வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தபோது, மல்லிப்பட்டினம் அருகே கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களில் செந்தில் வேல்,காளிதாஸ் என்ற இருமீனவர்கள் நீந்தி கரையை வந்தடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சக மீனவர்கள், மீதமுள்ள எட்டு மீனவர்களை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியிலுள்ள முனியசாமி (47), ரஞ்சித் குமார் (23), மதன் (26), இலங்கேஸ்வரன் (20), தரக்குடியன் (25), நந்தகுமார் (23), செந்தில் (31), முனீஸ்வரன் (24), உமாகாந்த்(19), காளிதாஸ் (19) என பத்து மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி படகு வாங்குவதற்காக கடலூருக்குச் சென்றனர்.

பின்னர் படகு வாங்கிவிட்டு கடல்வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தபோது, மல்லிப்பட்டினம் அருகே கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களில் செந்தில் வேல்,காளிதாஸ் என்ற இருமீனவர்கள் நீந்தி கரையை வந்தடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சக மீனவர்கள், மீதமுள்ள எட்டு மீனவர்களை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:படகு கவிழ்ந்து மீனவர்கள் மாயம்_ தேடும் பணியில் மீனவர்கள்


Body:ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியிலிருந்து கடந்த 29ஆம் தேதி படகு வாங்குவதற்காக கடலூர் சென்று விட்டு படகை வாங்கிய பின் கடல் வழியாக கடலூரில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டனர். நிலையில் மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கடலில் ஏற்பட்ட கடும் சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் மீனவர்கள் தத்தளித்த நிலையில் சில மீனவர்களை காணவில்லை. இதனால் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றி படகில் ஏற்றினர். இருந்தும் சில மீனவர்கள் காணாததால் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.